திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே ஆலங்காட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மே தின சிறப்பு நிகழ்வு நகர ஒன்றியத்தின் சார்பில் நடைபெற்றது. நிகழ்வில் ஒன்றியச் செயலாளர் பழனிச்சாமி தலைமை வகித்தார். நகரச் செயலாளர் சி.செல்லத்துரை முன்னிலை வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.ஜோதிபாசு, மாவட்டக் குழு உறுப்பினர் கே.வி.இராஜேந்திரன் பங்கேற்றனர். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், உறுப்பினர் ரசீது வழங்கி சிறப்புரையாற்றினார்.