districts

உழைப்பவர்களுக்கு உரிமைகளை வழங்கிடுவோம்!

பாபநாசம், ஏப்.30 - மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தொழிலாளர்கள், உழைப் பாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மே தின  வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உழைப்பின் சிறப்பை உலகம் முழுவதும்  கொண்டாடிடும் உன்னதமான நாள் மே தினம். தொழிலாளர்களுக்கு எட்டு மணி நேர  வேலை, வேலைக்கேற்ற ஊதியம் முதலா னவை சட்டப்பூர்வமாக உலக அரங்கில் உறுதி செய்யப்பட்ட நாள் அன்று. உழைப்புக்கேற்ற ஊதியமின்மை, கொத்தடிமைத்தன இன்னல்கள் ஆகிய வற்றில் இருந்து தொழிலாளர்களுக்கு விடு தலை கிடைக்கச் செய்த நாள் மே தினம்! இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்காக வும், வளர்ச்சிக்காகவும் உழைத்ததில் தொழி லாளர்களின் பங்கு மகத்தானது. தொழிலாளி யின் வியர்வை உலரும் முன், அவருக்கான கூலியைக் கொடுத்து விடுங்கள் என்ற நபிகள்  நாயகத்தின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப, உழைப்பவர்களுக்கான உரிமைகளை வழங்கிடுவோம். உலக அளவில், புரட்சிகள் என்பவை தொழிலாளர்கள் ஆயுதம் ஏந்தியும், உயிர்த்  தியாகம் செய்தும் கிடைக்கப் பெற்றவையே.  சாதி, மதம், இனம், மொழி, நிறம் என்ற  வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு மனித குலம் முழுவதும் தொழிலாளர்கள் என்ற ஒற்றைப் புள்ளியில் ஒருங்கிணையும் உன்னத நாளாக இந்த தினம் திகழ்கிறது.  அனைத்து தொழிலாளிகளின் வறு மையை ஒழித்து, எல்லோருக்கும் நல்வாழ்வு  கிடைக்க வேண்டும்.  சுரண்டலற்ற, சாதி- மத பேதமற்ற, புதியதோர் உலகம் செய்ய  அனைவரும் உறுதி ஏற்போம். உழைப்பா ளர்கள், தொழிலாளர்கள் அனைவருக்கும் இனிய மே தின வாழ்த்துகள்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.