கும்பகோணம், பிப்.21- நில மோசடி செய்து விவசாயி களை வஞ்சிக்கும் திருப்பனந்தாள் காசிமட நிர்வாகம் மீது நடவ டிக்கை எடுத்திட வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடு தலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகள் சார்பில் திருவிடைமரு தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விசிக மாவட்ட அமைப்பாளர் பாலகுரு தலைமை வகித்தார். சிபிஎம் மாவட் டக் குழு உறுப்பினர் சா.ஜீவபாரதி, விசிக முன்னாள் மாவட்டச் செயலா ளர் தமிழருவி, மாநில துணைத் தலைவர் நாகப்பன், சிபிஎம் மாவட் டக் குழு உறுப்பினர் பக்கிரிசாமி, விவசாய தொழிலாளர் சங்கத் தலைவர் கலைமணி, மதிமுக ஒன்றி யச் செயலாளர் பழனி, காங்கிரஸ் ஒன்றிய செயலாளர் மருதப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.
ஆர்ப்பாட்டத்தில் திண்டிவனம்- தஞ்சை தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்துதல் பணிக்காக திருப்பனந்தாள் பகுதி விவசாயி களின் நஞ்சை நிலங்களை நெடுஞ் சாலைத்துறை கையகப்படுத்தி யது. அதற்கான இழப்பீட்டு தொகை முழுவதையும் திருப்பனந் தாள் காசி மடமும் ஸ்ரீ அருண ஜடேஸ்வர கோவில் நிர்வாகமும் பெற்றுக்கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு எந்த நிவாரண மும் வழங்காமல் மோசடி செய்து வருகிறது. எனவே நெடுஞ்சாலைத்துறை யிடமிருந்து பெற்ற இழப்பீட்டுத் தொகையை நிலம் வைத்திருந்த விவசாயிகளிடம் ஒப்படைக்க நட வடிக்கை எடுக்க வேண்டும். மேலும் திருப்பனந்தாள் காசி மடம் அரசுக்கு சொந்தமான நிலங் களை வகை மாற்றம் செய்து விற்று கோடிக்கணக்கான ரூபாய் நில மோசடி செய்துள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து நிலங் களை கைப்பற்றி ஏழைகளுக்கு குடி மனை வழங்கிட வேண்டும். திருப்பனந்தாள் காசி மடத் திற்குச் சொந்தமான பள்ளி மற்றும் கல்லூரியில் இட ஒதுக்கீடு அடிப்ப டையில் பணி ஆணை வழங்கிட நட வடிக்கை எடுக்க வேண்டும். ஆண்டாண்டு காலமாக திருப்ப னந்தாள் காசிமடத்தில் நிலத்தில் சாகுபடி செய்து வரும் குத்தகை விவசாயிகளுக்கு தான்தோன்றித் தனமாக குத்தகை பாக்கி நோட் டீஸ் அனுப்பும் காசிமடத்தின் மீது நடவடிக்கை எடுத்து நில உச்ச வரம்பு சட்டத்தை நடைமுறைப் படுத்தி விவசாயிகள் மற்றும் குடி யிருப்போரை நிலத்தை விட்டு வெளியேற்ற முயற்சிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகள் வலியுறுத்தப்பட்டன.