districts

img

மருதுபாண்டியர் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா

தஞ்சாவூர், மே 27-  

    மருதுபாண்டியர் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவர்  கொ.மருதுபாண்டியன், தலைமை வகித்தார்.  நிகழ்வில் மருதுபாண்டியர் கல்லூரி முன்னாள் முதல்வர்  முனைவர். ப. காசிநாதன் தமது அனுபவங்களை உரையாக வழங்கினார்.  

    இதில், மருதுபாண்டியர் கல்லூரி, முதல்வர் முனைவர் மா.விஜயா, மருதுபாண்டியர் கல்வியியல் கல்லூரி, முதல்வர் முனைவர்  ப.சுப்பிரமணியன்  துணை முதல்வர், முனைவர் ரா.தங்கராஜ், புலத்தலைவர் (ஆராய்ச்சி) முனைவர் கோ. அர்ச்சுனன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  

   இவ்விழாவில் முன்னாள் மாணவ, மாணவியர்கள் 450 பேர் கலந்து கொண்டு தங்கள் கல்லூரியில் பயின்ற கடந்த கால அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். மாணவ-மாணவிகளுக்கு மருதுபாண்டியர்  கல்வி நிறுவனங்களின் தலைவர்  நினைவுப் பரிசினை வழங்கினார்.