districts

பொதுப்போக்குவரத்தை பலப்படுத்த வலியுறுத்தி திருச்சி, நாகை, புதுக்கோட்டையில் மாரத்தான் ஓட்டம்

திருச்சிராப்பள்ளி, பிப்.12- சுற்றுச்சூழலைப் பாதுகாப்போம்; பொதுப் போக்குவரத்தைப் பலப்படுத்து வோம் என்ற முழக்கத்தை முன்னிறுத்தி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக  ஊழியர் சங்கம் சார்பில் திருச்சிராப்பள்ளி யில் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. மாணவ- மாணவிகள், ஆண்கள்- பெண்கள் என நான்கு பிரிவுகளாக நடத்தப்பட்டது. மொத்தம் 8,00-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்விற்குச் சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், மாவட்டத் தலைவர் சீனிவாசன், ஆகியோர் தலைமை  வகித்தனர். போட்டிகளைக் கண்டோன்மென்ட் காவல் உதவி ஆணையர்  கென்னடி துவக்கி வைத்தார். போட்டிகளில் வெற்றி பெற்றவர் களுக்குச் சமூகச் செயல்பாட்டாளர் ஸ்ரீதர், தடகள வீரர் அண்ணாவி ஆகியோர் பரிசு களை வழங்கினர். முதல் பரிசாக ரூ.3 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ, 2 ஆயிரம்,  மூன்றாம் பரிசாக ரூ,ஆயிரம் வழங்கப் பட்டது. நான்கு முதல் பத்து இடங்களைப் பிடித்தவர்களுக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப் பட்டன. சிஐடியு மாவட்டப் பொருளாளர் சிங்கராயர் நன்றி கூறினார். போட்டிக்கான ஏற்பாடுகளைத் தொழிற்சங்க நிர்வாகிகள் கருணாநிதி, பெரு மாள், சந்திரன், செல்வராஜ், வாலிபர் சங்க நிர்வாகி லெனின், மாத சங்க நிர்வாகிகள் ரேணுகா, சரஸ்வதி ஆகியோர் செய்திருந்தனர்.

நாகப்பட்டினம்

நாகப்பட்டினத்தில் மாரத்தான் ஓட்டத்தை நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர்  அ.அருண் தம்புராஜ் துவக்கி வைத்தார். நிகழ்விற்கு மண்டலப் பொதுச் செயலாளர் எஸ்.ஆர்.ராஜேந்திரன் தலைமை வகித்தார். கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி, மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் என்.கௌதமன்.  நகர்மன்றத் தலைவர் இரா.மாரிமுத்து. அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் அ.தி.அன்பழகன், சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.தங்கமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பேரணி மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகத்தில் நிறைவுற்றது போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நாகப்பட்டினம் தொகுதி சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் வி.மாரிமுத்து பரிசுகளை வழங்கினார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகிலிருந்து தொடங்கிய மாரத்தான் போட்டியை கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை துவக்கி வைத்தார். 500-க்கும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். ஆண்களுக்கான பிரிவில் பாலமுருகன், சூர்யா, சத்தியமூர்த்தி வெள்ளைச்சாமி ஆகியோர் முறையே முதல் நான்கு இடங்களைப் பெற்றனர். பெண்களுக்கான பிரிவில் சுஜித்தா, ஆர்த்தி, யுவராணி, சுபாஷினி முறையே முதல் நான்கு இடங்களைப் பெற்றனர். ஒவ்வொரு பிரி விலும் ஆறுதல் பரிசுகளையும் சேர்த்து  19 நபர்களுக்குப் பரிசுகள் வழங்கப் பட்டன. மற்றும் போட்டியில் பங்கேற்ற  அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்குக் கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை, மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், ஐஐபிஎச்எஸ் பயர் சேஃப்டி கல்லூரி தாளாளர் முருகானந்தம், இயக்குநர் சாந்தி முருகானந்தம், சிஐடியு மாநிலச் செயலாளர் எஸ்.ஸ்ரீதர், மாவட்டத் தலைவர் கே.முகமதலிஜின்னா, பொருளாளர் எஸ்.பாலசுப்பிரமணியம், அரசு போக்குவரத்து ஊழியர சங்க மண்டலப் பொதுச் செயலாளர் ஆர்.மணி மாறன், தலைவர் கே.கார்த்திகேயன், பொரு ளாளர் தரணி முத்துக்குமார், துணைப் பொதுச்செயலாளர் செந்தில்நாதன் உள்ளிட்டோர் ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினர். நிகழ்வை தமுஎகச மாவட்டக் குழு உறுப்பினர் புதுகை பாண்டியன் ஒருங்கிணைத்தார்.

தஞ்சாவூர் 

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கம் (சிஐடியு) கும்பகோணம் மண்டலம் சார்பில் மாரத்தான் ஓட்டம் தஞ்சாவூர் மாநகராட்சி அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.  நிகழ்ச்சிக்கு, அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்க மண்டலத் தலைவர் காரல்  மார்க்ஸ் தலைமை வகித்தார். மண்டலப் பொதுச்செயலாளர் ஜி.மணிமாறன் வர வேற்றார். மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியாக நடைபெற்ற மாரத்தான் ஓட்டப் போட்டியைத் துவக்கி வைத்தார். போட்டி அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் தொடங்கி, மருத்துவக் கல்லூரி வரை சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் நடைபெற்றது.  500க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு மொத்தப் பரிசாக ரூ.50,000 வழங்கப்பட்டது. மேலும், பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது.  மாநகராட்சி மேயர் சண். இராம நாதன், அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் மண்டல மேலாளர் ஜெபராஜ் நவமணி, மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல், சிஐடியு மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் கே.திருச்செல்வன், சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன், சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.கண்ணன், கே.அன்பு, ஏ.ராஜா,  எஸ்.மில்லர் பிரபு, சாய் சித்ரா, செங்குட்டுவன், விரைவு போக்குவரத்து சங்க மாநில துணைத்தலைவர்  வெங்க டேசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் கே.சந்துரு, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஆம்பல் துரை.ஏசுராஜா, அரசுப் போக்குவரத்துக் கழக சங்க நிர்வாகிகள் முத்துக்குமார், வெங்கடாஜலபதி, முருக சக்தி, அர்ஜுன், ராஜசேகர், ஓய்வு பெற்றோர் சங்கம் ஜீவா, திருநாவுக்கரசு, மண்டலப் பொருளாளர் எஸ்.ராமசாமி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.