மன்னார்குடி, நவ.4 - 31-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாடு திருவாரூர் மாவட்டம் பூந் தோட்டத்தில் கடந்த வாரம் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் இருந்து 285 ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இதில் மன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளியின் 12ஆம் வகுப்பு மாணவர்கள் ஆர்.உலகராஜ், ஒய்.சிவராஜ் ஆகியோர் முதுகலை இயற்பியல் ஆசிரியர் முனைவர் எஸ்.அன்பரசு வழிகாட்டுதலில், ‘சமூக வலைதளங்களினால் ஏற்படுகிற கற்றல் குறைபாடு’ எனும் தலைப்பில் ஆய்வு கட்டுரை சமர்ப்பித்தனர். இக்கட்டுரை புதுக்கோட்டை யில் நடைபெறும் மண்டல அறிவியல் மாநாட்டிற்கு தேர்வாகியுள்ளது. மன்னார்குடி பகுதியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் 500 மாணவர்களிடம் ஆய்வு நடத்தப் பட்டது. அதில், 80 சதவீதத்திற்கு அதிகமான 12 ஆம் வகுப்பு மாணவர்கள் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் செயல்பாட்டாளர்களாக இருப்ப தும், நாள் ஒன்றுக்கு மூன்று முதல் ஐந்து மணி நேரம் வரை சமூக வலைதளங்களில் நேரம் செல விடுவதும் கண்டறியப்பட்டது. சமூக வலைதளங்களில் தனி நபர் பாதுகாப்பின்மை, அதிக நேரம் செலவிடுவதால் ஏற்படுகிற உளவியல் பிரச்சனைகள், கற்றல் குறைபாடு போன்றவை குறித்து மாணவர் களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. மேலும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் கைப்பேசிகளை மாணவர்கள் பயன்படுத்தி னால், கைப்பேசிகள் சுவிட்ச் ஆப் ஆகிவிடு வது போலவும், அதிக நேரம் கைப்பேசிகளை பயன்படுத்துவதால் கைப்பேசிகளில் உயரும் வெப்ப நிலைக்கு தகுந்தவாறு, அவை குறிப்பிட்ட சமூக வலைதளங்களில் இருந்து வெளியேறி விடுவது போன்ற தீர்வு களும் ஆய்வில் முன்வைக்கப்பட்டன. வெற்றி பெற்ற மாணவர்களையும் வழி காட்டி ஆசிரியரையும் தலைமை ஆசிரியர் எம்.திலகர், அறிவியல் இயக்க நகர கல்வி யாளர்கள் பாராட்டினர்.