மன்னார்குடி, ஜூன் 1-
புதிய ஒப்பந்ததாரர் பெற்ற தொழிலாளர் எண்ணிக்கை ஊதியம் தெரியப்படுத்தப்பட வேண்டும். போராடிப் பெற்ற ஒப்பந்த தூய்மைத் தொழிலாளர்களின் ஊதிய எண் ணிக்கை, மருத்துவக் காப்பீடு, ஆயுள் காப்பீடு போன்ற திட்டங்கள், விடுப்பு போன்ற வற்றை தொடர வேண்டும். தொழிலாளர் சேம நலநிதியை தாமதமின்றி உரிய கணக்கில் செலுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி மன்னார்குடி நகராட்சி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களின் வேலை நிறுத்தம் துவங்கியது.
வேலையை புறக்கணித்த பணியாளர்கள் நகராட்சி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். தலைவர் ஜி.ரகுபதி தலைமை வகித்தார். உள்ளாட்சி தொழிலாளர் சங்க மாவட்டச் செய லாளர் முரளி, துணைத் தலைவர் கே.சிவ சுப்ரமணியன் உள்ளிட்டோர் பேசினர். சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முருகையன் சிறப்பு ரையாற்றினார். வேலைநிறுத்தத்தில் ஈடு பட்டுள்ள தொழிலாளர்கள் ஜூன் 3 (சனிக் கிழமை) அன்று குடும்பத்துடன் உண்ணா விரதம் மேற்கொள்ள உள்ளனர்.