districts

ஆண்டிபட்டியில் வாலிபரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை

தேனி நீதிமன்றம் தீர்ப்பு

தேனி, ஏப்.26-

   ஆண்டிபட்டியில் முன் விரோதம் காரணமாக வாலிபர்  கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள்  தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி யுள்ளது.

   தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பாப்பம்மாள்புரத்தை சேர்ந்தவர் செல்வராஜ் என்பவரின் மகன் சந்தோஷ் (19).  இவர், முன்விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த  முத்துராஜ் என்பவர் மகன் ஆனந்தராஜ் (36) என்பவரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார் .இது குறித்து  16.10.2018 ஆம் தேதி செல்வராஜ் கொடுத்த புகாரின் பேரில்  ஆண்டிபட்டி காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு தேனி மாவட்ட  கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.  வழக்கு இறுதி விசாரணை முடிக்கப்பட்டு  செவ்வாய்க் கிழமை  தீர்ப்பு வழங்கிய கூடுதல் அமர்வு மன்ற நீதிபதி பி. கணேசன், குற்றவாளி ஆனந்தராஜூக்கு  ஆயுள் தண்டனை யும், ரூ.5 ஆயிரம் அபராதம், அபராதத்தை கட்ட தவறினால்  இரண்டு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.