பாபநாசம், செப்.6 - மாநில மாசு கட்டுப்பாட்டு வாரி யத்தின் அதிகாரத்தைப் பறிக்கும் ஒன்றிய அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், பாப நாசம் எம்.எல்.ஏ-வுமன ஜவா ஹிருல்லா கண்டனம் தெரிவித் துள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது: காற்று மற்றும் நீர் மாசுபாடு சட்டத்தில், மாநில அரசின் அதி காரத்தைப் பறிக்கும் வகையில் ஒன்றிய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகம் சில திருத்தங்களை முன்வைத்து வரைவு சட்டத் திருத்தங்களை அரசிதழில் வெளி யிட்டு இருக்கிறது. இதன் வாயிலாக மாநிலத்தின் அதிகார வரம்பைத் துண்டித்து இருக்கும் ஒன்றிய அர சிற்கு வன்மையான கண்ட னங்களை தெரிவிக்கிறேன். ஒரு தொழிற்சாலையை நிறுவு வதற்கான அனுமதியையும், இயக் குவதற்கான அனுமதியையும் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரி யங்கள் இதுவரை வழங்கி வந்திருக்கிறது. அத்தோடு இல்லா மல் ஆணைகள் புதுப்பிப்பை ரத்து செய்வது, மறுப்பது போன்ற நட வடிக்கைகளும், மாநில அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிகாரமாக இதுவரை இருந்து வந்தது. எந்த ஒரு தொழிற்சாலையும், கட்டுமானமும், செயல்படுவதற்கு முன்பு ஒன்றிய அரசிடமும், மாநில அரசிடமும் முன் அனுமதி பெற வேண்டும். தற்போது இந்தச் சட்டத் திருத்தத்தின் வாயிலாக மாநில அரசின் அதிகாரத்தைப் பறித்து, ஒன்றிய அரசு மட்டுமே அனைத்து ஆணைகளையும் வழங்கும் உரி மைகளைத் தன்னகத்தே வைத்துக் கொண்டது. இது முற்றிலும் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரி யத்தின் அதிகாரத்தைப் பறிக்கும் செயலாகும். உதாரணமாக, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் எல்லையில் தனியார் நிறுவனம் ஒன்று பல ஆண்டுகளாக மருந்து உற்பத்தி ஆலையை நடத்தி வரு கிறது. அந்த ஆலை சரணாலய எல்லைக்குள் இருக்கிறது என்பது தெரியாமலேயே, அதன் ஆலை விரிவாக்கத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதியை ஒன்றிய அரசிடம் இருந்து அந்த நிறுவனம் பெற்றிருக் கிறது. பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்ட பின்னரும்கூட, சர்ச் சைக்குரிய அந்தச் சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்யாமல் நிறுத்தி வைக்க மட்டுமே ஒன்றிய அரசு உத்தரவிட்டிருக்கிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இவ்வளவு அலட்சியமாக செயல்ப டும் ஒன்றிய அரசு மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலை வரை தேர்ந்தெடுக்கும் வழிமுறை களையும் வகுத்துத் தந்திருக் கிறது. இந்தப் பரிந்துரையின் அடிப்படையில் ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் அதிகாரியும், மாநில சுற்றுச்சூழல் துறைக்குப் பொறுப்பாளர்களில் ஒருவராகச் செயல்படுவார் என்று தெரிய வரு கிறது. இதுவும் மாநில அரசின் அதி காரத்தில் ஒன்றிய அரசு தலை யிடும் வகையில் அமைந்துள்ளது. மாநில அரசு நிர்வாகமே இருக்க வேண்டியதில்லை என்ற ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை நிலை நாட்டும் வகையில், மாநில அரசு களின் அதிகாரங்களை மோடி அரசு தொடர்ச்சியாகப் பறித்து வரு கிறது. இதன் தொடர்ச்சியாக மாநில அரசின் அதிகாரங்களைப் பறித்து பெருநிறுவனங்களுக்கு ஆதர வாகச் சுற்றுச்சூழல் விதிகளை நீர்த்துப் போகச் செய்யும் சட்டங் களும், திருத்தங்களும் கொண்டு வரப்பட்டுக் கொண்டே இருக் கின்றன. தமிழ்நாடு அரசு இந்தச் சட்ட வரைவுகளை எதிர்த்து, ஒன்றிய அரசிடம் கருத்துகளைப் பதிவு செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். சுற்றுச்சூழலை மாசு படுத்தும் ஒன்றிய பாஜக அரசின் இந்தப் பிழையான முன்னெடுப் பிற்கு இந்தியா கூட்டணிக் கட்சிகள் கடும் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.