districts

3 ஆண்டு பணிபுரிந்தவர்களை நிரந்தரம் செய்க! கோயில் தொழிலாளர்கள் கோரிக்கை

சென்னை, மே 21 -

     3 ஆண்டு பணிபுரிந்த கோயில் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.  

    தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர்கள் யூனியனின் பூங்கா நகர், துறைமுகம் கிளையின் 3ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம், பொதுமக்கள் தாகம் தீர்க்கும் நீர்-மோர் பந்தல் திறப்பு விழா சனிக்கிழமையன்று (மே 20) சென்ன கேசவப் பெருமாள் கோவில் அருகே நடைபெற்றது.

   கிளைத் தலைவர் க.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாநில பொதுச் செயலாளர் அ.முத்துசாமி, மாநில இணை பொதுச்செயலாளர் கே.ஆர்.பாலசுந்தரம், மாநில துணைத்தலைவர்  எஸ்.தனசேகர், செயலாளர்  இரா. ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

   இந்த கூட்டத்தில், அரசு தேர்வாணையம் வாயிலாக செயல் அலுவலர் பணியிடம் நிரப்பும் போது, 25 விழுக்காடு பணியிடங்களை, ஏற்கெனவே கோவில் பணியில் உள்ள ஊழியர்களை கொண்டு நிரப்ப உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கிளையின் கவுரவ தலைவராக ஆர். தங்கவேல், தலைவராக ஜி.சங்கரன், செயலாளராக கே.எஸ்.யுவராஜ், பொருளாளராக ஜி.ரதி உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.