புதுக்கோட்டை, ஏப்.13 - கந்தர்வகோட்டை தொகுதியில் புதிய வேலைவாய்ப்புகளை உரு வாக்க மதிமுக வேட்பாளர் துரை. வைகோ-வை வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார் கந்தர்வ கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை. ‘இந்தியா’ கூட்டணியில் போட்டி யிடும் திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக வேட்பாளர் துரை. வைகோ சனிக்கிழமை கந்தர்வ கோட்டை சட்டமன்றத் தொகுதிக் குட்பட்ட குன்றாண்டார்கோவில் மற்றும் அன்னவாசல் ஒன்றியங்க ளில் சுற்றுப் பயணம் செய்து வாக்குகள் சேகரித்தார். வேட்பாளருடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கந்தர்வ கோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை பேசிய தாவது: இந்தப் பகுதிகளில் விவசாய மும் பாதித்து, தொழில் வாய்ப்பு களும் இல்லாததால் மக்கள் வறுமையின் கோரப்பிடியில் தவித்து வருகின்றனர். தொகுதி யின் சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில் இந்தப் பகுதிக்கு ஆற்றுப் படுகை மூலம் பாசன வசதி ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள் ளப்படுகிறது. தொகுதி முழுவதும் கல்விக்கும், சுகாதாரத்திற்கும், குடிநீர் உள்ளிட்ட மக்களின் அடிப் படைத் தேவைகளுக்கும் முன்னு ரிமை அளிக்கப்படுகிறது. நமது கோரிக்கையை ஏற்று, 68 சாதிகளை உள்ளடக்கிய சீர்மரபின ருக்கு இரட்டை சான்றிதழ் முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து, டிஎன்டி என்ற ஒன்றை சான்றிதழ் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட் டுள்ளார். இதன்மூலம் கந்தர்வ கோட்டையில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட பல்வேறு சமூகத் தினர் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் நல்ல பலனை அடைய முடியும். இங்கே சிலர் குறிப்பிட்ட சமூ கத்தை முன்னிறுத்தி வாக்குகளை பிளவுபடுத்தும் வேலையை செய்து கொண்டிருக்கின்றனர். அது ஒருபோதும் மக்கள் மத்தி யில் எடுபடாது. கடந்த மூன்றரை ஆண்டுகளாக கந்தர்வகோட்டை தொகுதியில் எந்தவிதமான சாதிய மோதலும் ஏற்பட்டதில்லை. கந்தர்வகோட்டை தொகுதி மக்கள் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு அரசியல் ரீதியான அணிதிரட்ட லுக்கே முன்னுரிமை அளிப்பார்கள். இங்கே மதிமுக வேட்பாளர் துரை.வைகோ வெற்றி பெற்றால், சட்டமன்ற உறுப்பினர் என்ற முறை யில் அவரோடு இணைந்து இந்தத் தொகுதிக்கு பல்வேறு பணிகளைச் செய்ய முடியும். குறிப்பாக, தஞ்சாவூரிலிருந்து புதுக்கோட்டைக்கு புதிய ரயில் பாதை ஏற்படுத்த முடியும். காவிரி, வைகை, குண்டாறு திட்டத்தை கந்தர்வகோட்டை தொகுதிக்குட் பட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்த முடியும். பாசன வசதிக்காக புதிய ஆற்றுப்படு கையை ஏற்படுத்த முடியும். விவ சாயம் சார்ந்த தொழிற்பேட்டையை உருவாக்க முடியும். புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். எனவே, மதிமுக வேட்பாளர் துரை.வைகோ-விற்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து, அவரை பெருவாரியான வாக்குகள் வித்தி யாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பிரச்சாரப் பயணத்தில் திமுக மாவட்டச் செயலாளர் கே.கே.செல்லப்பாண்டியன், மதிமுக மாவட்டச் செயலாளர் எஸ்.கே. கலியமூர்த்தி, விசிக மாவட்டச் செய லாளர் இளமதி அசோகன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ. ஸ்ரீதர், மாவட்டக் குழு உறுப்பினர் கே.தங்கவேல், ஒன்றியச் செய லாளர் எஸ்.கலைச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.