districts

img

ஒப்பந்த, பகுதிநேர ஊழியர்களை பணி நிரந்தரம் செய்க

திருச்சிராப்பள்ளி, ஜூன் 23 -

     மின் ஊழியர்களின் உயிரை காக்க  வேண்டும். 60 ஆயிரம் காலிப் பணியிடங் களை உடனே நிரப்ப வேண்டும். கேங்மேன் உள்ளிட்ட பணியாளர்களுக்கு 6 சதவீத ஊதிய உயர்வை வழங்க வேண்டும். கேங் மேன் பணியாளர்களுக்கு ஊர் மாற்றல் உத்த ரவை உடனே வழங்க வேண்டும்.

    தேர்வு செய்து நிலுவையில் உள்ள 5 ஆயிரம் கேங் மேன் பணியாளர்களுக்கு பணி ஆணை வழங்க வேண்டும். கேங்மேன் பணியாளர்களுக்கு விடுப்பு உள்ளிட்ட சலுகைகளை உடனே வழங்க வேண்டும். கேங்மேன் பணியாளர்களை கள  உதவியாளர்களாக பணி மாற்றம் செய்ய  வேண்டும். வாரிய ஆணை எண்.02 ஐ ரத்து  செய்ய வேண்டும். ஒப்பந்த ஊழியர்களை யும், பகுதிநேர பணியாளர்களையும் அடை யாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரி க்கை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் வியாழனன்று பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

   திருச்சி மாவட்டம் மன்னார்புரத்தில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறி யாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு கிழக்கு கோட்ட செயலாளர் நாக ராஜன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்ட த்தை விளக்கி வட்ட செயலாளர் எஸ்.கே. செல்வராஜ், வட்ட பொருளாளர் பழனி யாண்டி, கோட்ட நிர்வாகிகள் பேசினர். சிஐ டியு மாநில துணைத் தலைவர் ரெங்கராஜன் சிறப்புரையாற்றினார்.  

புதுக்கோட்டை  

    புதுக்கோட்டை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் அருகே நடை பெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் திட்டத்  தலைவர் எஸ்.சித்தையன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், ஊழியர் சங்கத்தின் திட்ட செய லாளர் கு.நடராஜன், சிஐடியு மாவட்டத் தலை வர் க.முகமதலிஜின்னா, மாவட்டப் பொருளா ளர் எஸ்.பாலசுப்பிரமணியன், துணை செய லாளர் ஆர்.மணிமாறன் உள்ளிட்டோர் பேசி  னர்.

தஞ்சாவூர்

     தஞ்சாவூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலக வாயிலில், தலைவர்  அதிதூத மைக்கேல்ராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக்கை களை விளக்கி கௌரவ தலைவர் து.கோவிந் தராஜூ, வட்ட செயலாளர் பி.காணிக்கை ராஜ், பொருளாளர் சங்கர் மற்றும் உழைக்கும்  பெண்கள் சார்பாக விஜயலெட்சுமி ஆகி யோர் உரையாற்றினர். மாநிலச் செயலாளர் எஸ்.ராஜாராமன் சிறப்புரையாற்றினார்.

மயிலாடுதுறை

    மயிலாடுதுறை செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு அமைப்பின் திட்டத் தலைவர் என்.வெற்றிவேல் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ப.மாரியப்பன், மாவட்டத் தலைவர் ரவீந்திரன், திட்டச் செயலா ளர் எம்.கலைச்செல்வன் உள்ளிட்டோர் உரை யாற்றினர்.

திருவாரூர்

    திருவாரூர் மின் மேற்பார்வை பொறியா ளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழி யர் மத்திய அமைப்பு சிஒடிஇஇ, சிஐடியு திரு வாரூர், மன்னார்குடி மின் கோட்ட கிளை சார்பாக பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. கோட்ட துணைத் தலைவர் எஸ்.மோகன சுந்தரம் தலைமை வகித்தார்.