மதுரை, ஜூன் 28-
மதுரை மாநகராட்சி மண்டலம் 2 (வடக்கு) அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் ஆணையாளர் கே.ஜே.பிரவீன்குமார் முன்னிலையில்மேயர் இந்திராணி பொன்வசந்த்தலைமையில் ஜூன் 27 அன்று நடைபெற்றது.
இம்முகாமில் துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர் சரவணபுவனேஸ்வரி, துணை ஆணையாளர் தயாநிதி, உதவி ஆணையாளர் திருமதி. வரலெட்சுமி, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன்,மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பொதுமக்கள்பலர் கலந்து கொண்டனர்.