districts

திருச்சி முக்கிய செய்திகள்

எக்மோ கருவியுடன் 65 நாள்கள் போராடிய சிறுவன்

ஹைதராபாத், டிச.25- ஆசியாவிலேயே முதல் முறையாக, 65 நாள்கள் எக்மோ கருவியுடன் சிகிச்சை பெற்று உயிர்பிழைத்த 12 வயது சிறுவன் மிகக் கடினமான காலத்தை வென்று வந்துள்ளான். அதிசயிக்கத்தக்க வகையில் 12 வயது சிறுவன், கரோனா பாதித்து, எக்மோ கருவி பொருத்தப்பட்டு 65 நாள்கள் அதன் உதவியோடு சிகிச்சை பெற்று தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளான். ஹைதராபாத்தில் உள்ள தனியார் நிறு வனத்தில் சிறுவனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து தகவல்கள் வெளி யாகியுள்ளன. நான்கு மாதங்களுக்கு முன்பு  செப்டம் பர் மாதம் சிறுவனுக்கு கொரோனா பாதித்தது. அப்போது அவனது உடலு றுப்புகள் அனைத்தும் வெகுவாகப் பாதிக்கப்பட்டன.  வட இந்தியாவைச் சேர்ந்த இந்தச் சிறு வன், சிறப்பு விமானம் மூலம் ஹைதரா பாத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவம னைக்குக் கொண்டு வரப்பட்டான். அங்கு உடனடியாக அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து கிம்ஸ் மருத்துவமனை மாற்று நுரையீரல் மருத்துவப் பிரிவின் தலைவர் டாக்டர். விஜில் கூறுகையில், “மருத்துவர்கள் கூறுகையில், சிறுவன் மருத்துவமனைக்கு வந்த போது அவனது சிறுநீரகம் முற்றிலும் பாதிக்கப்பட்டு, உட லுக்கு ஆக்சிஜனை அளிக்கும் திறனற்று இருந்தது. உடனடியாக எக்மோ சிகிச்சை அளித்து, நுரையீரலுக்கு போது மான ஓய்வு அளிக்கப்பட்டு, அது குணம டைய சிகிச்சை அளிக்கப்பட்டது என் றார்” உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ வில் உள்ள மிட்லாண்ட் ஹெல்த்கேர் அண்ட் அனாலிசிஸ் மருத்துவமனையின் மூத்த நுரையீரல் துறை நிபுணர் டாக்டர் பி.பி. சிங் கூறுகையில், “நிமோனியா  நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன்,  ஹைத ராபாத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டான். அவர் நல மாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளான். எங்களது மருத்துவமனை ஹைதரா பாத் கிம்ஸ் மருத்துவமனை மருத்துவர் களின் கூட்டு முயற்சியால் சிறுவன் நல மடைந்துள்ளான்” என்றார்.

‘கோவில் நிலத்தை ஆக்கிரமித்தால் குற்றவியல் நடவடிக்கை எடுத்திடுக!’

சென்னை,டிச.25- கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது குற்றவியல் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள் ளது. இது தொடர்பாக அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப் பட்டிருக்கும் சுற்றறிக்கையில், கோவில் களுக்கு சொந்தமான சொத்துகளில் சட்டப்பூர்வமான வாடகை ஒப்பந்தம் ஏதுமின்றியும், உரிய வாடகை செலுத்தா மலும் ஆக்கிரமிப்பு செய்து அனுபவித்து வரும் நபர்கள் மீது இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் . கோயில் சொத்துகளை சட்டப்படியான உரிமை யின்றி அனுபவித்து வரும் நபர்களை கண்டறிந்து, அவர்கள் மீது காவல் நிலை யத்தில் புகார் அளிக்க வேண்டும். ஆக்கிர மிப்பாளர்களுக்கு எதிராக தனிநபர்கள் தரப்பில் காவல்நிலையத்தில் அளிக்கப் படும் புகார்களுக்கு தேவையான ஆவ ணங்களையும் கோவில் நிர்வாகிகள் வழங்கி ஒத்துழைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வேளாண் கல்லூரிகள் தொடங்க நிதி  ஒதுக்கி அரசாணை வெளியீடு

கரூர், டிச.25- புதிய வேளாண் கல்லூரிகள் தொடங்குவதற்கு  நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் புதிய வேளாண் கல்லூரி தொடங்குவதற்காக தமிழக அரசு  ரூ.10 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளி யிட்டுள்ள அரசாணையில், தற்போது வேளாண்மை கல்வி மற்றும் வேளாண் ஆராய்ச்சியின் தேவை அதிகரித்துள்ளது. இதனைக் கருத்தில்கொண்டு, வேளாண் நிதிநிலை அறிக்கையில் கிருஷ்ணகிரி யில் புதிதாக அரசுத் தோட்டக்கலை கல்லூரி தொடங்க அறிவிக்கப்பட்டது.  வேளாண் கல்வியின் முக்கியத்துவம் கருதி, 2021-2022 ஆண்டில் கரூர் மாவட்டம், நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வேளூர், சிவகங்கை மாவட்டத்தில் செட்டிநாடு ஆகிய இடங்களில் மூன்று புதிய அரசு வேளாண்மைக் கல்லூரிகள் துவங்குவதற்கு மாநில அரசு தலா ரூ. 10 கோடி வீதம் மொத்தம் ரூ.30 கோடி நிதியினை ஒதுக்கும்” என அறிவிக்கப் பட்டுள்ளது. 

இராமநாதபுரத்தில்  வேலை நிறுத்த ஆயத்த மாநாடு

இராமநாதபுரம், டிச.25-  ஒன்றிய மோடி அரசின் தொழி லாளர் விரோதக் கொள்கைக ளைக் கண்டித்து 2022 பிப்ரவரி 23 ,24 ஆகிய நாட்களில் தேசம் தழுவிய வேலை நிறுத்தப் போராட் டம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இப்போராட்டத்தை வெற்றிபெறச் செய்வதற்காக இராமநாதபுரத்தில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடைபெற்றது. ஏஐடியுசி மாவட்ட தலைவர் எஸ்.பி.இராதா, சிஐடியு மாவட்ட தலைவர் எம்.அய்யாதுரை, எல்பிஎப் மாவட்ட தலைவர் காஞ்சி, எச்எம்எஸ் மாவட்டத் தலைவர் சண்முகவேல் ஆகி யோர் தலைமை வகித்தனர். சிஐ டியு மாவட்ட செயலாளர் எம்.சிவாஜி ,எல்பிஎப் மாவட்டச் செய லாளர் எஸ். வின்சென்ட் அமல தாஸ், ஏஐடியுசி மாவட்டச் செய லாளர் என்.கே.ராஜன் , ஏஐஐ இஏ கிளைச் செயலாளர் டி.முத் துப்பாண்டி, டிஎன்பிடிஎப் மாவட்டச் செயலாளர் மு.முனிய சாமி, எச்எம்எஸ் மாவட்டச்செய லாளர் எஸ். குமரகுருபரன், ஆகி யோர் வேலைநிறுத்தத்தின் நோக் கங்களை விளக்கி பேசினர்.