அரியலூர், ஏப்.8 - மோடி தலைமையில் நாடு சர்வாதிகார ஆட்சியை நோக்கி செல்கிறது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசினார். அரியலூர் பேருந்து நிலையம் அருகே சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனை ஆதரித்து மதிமுக சார்பில் பொதுக் கூட்டம் நடை பெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச் செய லாளர் வைகோ பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த நாடாளுமன்றத் தேர்தல் முக்கியமான தேர்த லாகும். இது ஜனநாயகத்திற்கும் சர்வாதி காரத்திற்கும் இடையேயான போர். திரா விட இயக்கத்தை அழிப்பேன் என்று பிரதமர் மோடி தனது பதவியின் மதிப்பறியாது பேசு கிறார். இந்த திராவிட இயக்கப் பூமி, பல்வேறு தலைவர்களும் லட்சக்கணக்கான தொண் டர்களும் பாடுபட்ட வளர்த்த இயக்கம். மோடி தலைமையில் நாடு சர்வாதிகார ஆட்சியை நோக்கி போகிறது. இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் நாடாளுமன்ற முறையை மாற்றிவிட்டு, ஜனா திபதி ஆட்சி முறையை கொண்டு வந்து, தானே ஜனாதிபதி ஆகலாம் என நினைத்துக் கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. திராவிட இயக்கம் உள்ளவரை அது நடக்காது. இந்தியில் எழுதி வைத்து பாரதியார் பற்றியும், திருக்குறளை பற்றியும் பேசி தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றலாம் என்று நினைக்கிறார் மோடி. கோட்சேயின் கூட்டம் பகிரங்கமாக உலவுகிறது இன்று. நமது தாய்மொழிக்கு மோடியின் வடிவில் ஆபத்து வருகிறது. தமிழ்நாடு இந்துத்துவா சக்திகளை வீழ்த்தும். எனவே, வேட்பாளர் தொல். திருமா வளவனை லட்சக்கணக்கான வாக்குகள் வித்தி யாசத்தில் வெற்றி பெறச் செய்ய, அனை வரும் பானை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்றார். கூட்டத்தில் அரியலூர் மற்றும் ஜெயங் கொண்டம் சட்டமன்ற உறுப்பினர்கள், கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.