புதுக்கோட்டை, செப்.24 - பள்ளியிலிருந்து வெளியேறும் ஆசி ரியர்களுக்கு சான்றிதழைத் தரமறுக் கும் தனியார் பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டு மென கந்தர்வகோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை வலியுறுத்தி உள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ஷிவானி வித்யா மந்திர் என்ற சிபிஎஸ்இ பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சேரும் ஆசிரியர்கள் தங்களது அசல் சான்றிதழ்களை கொடுத் தால்தான் சேர்த்துக் கொள்ளப்படு கின்றனர். இவர்கள் அரசுப் பணி களுக்கு சேருவதாக இருந்தாலோ அல்லது வேறு காரணங்களுக்காக பள்ளியை விட்டு விலக நேரிட்டாலோ அவர்களுக்கு அசல் சான்றிதழ்களை பள்ளி நிர்வாகம் வழங்குவதில்லை எனக் கூறப்படுகிறது. அப்படி அசல் சான்றிதழ்களைக் கொடுக்க வேண்டுமானால், ஒரு பெரும் தொகையைக் கொடுத்தால் தான் தர முடியும் எனவும், அப்படி கொடுக்க மறுத்து சான்றிதழ் கேட்ப வர்களை அடியாட்களை வைத்து பல வகைகளிலும் துன்புறுத்துவதாக பாதிக் கப்பட்ட ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்ன துரையிடம் இதுகுறித்து திங்கள் கிழமை கோரிக்கை மனு அளித்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரி களைத் தொடர்பு கொண்டு, சம்பந்தப்பட்ட பள்ளி மீது நட வடிக்கை எடுக்கவும், பள்ளி யில் இருந்து வெளியேறிய ஆசிரியர்கள் அனைவருக்கும் அசல் சான்றிதழ்களை உடன டியாக கொடுக்கவும் நடவ டிக்கை எடுக்குமாறு வலியு றுத்தினர். மேலும், இதுபற்றி பள்ளிக் கல்வித்துறை அமைச்சரிடம் வலி யுறுத்த உள்ளதாகவும் எம்.சின்னதுரை எம்எல்ஏ., தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், செயற்குழு உறுப்பினர் சு.மதியழகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். மேற்கண்ட கோரிக்கை குறித்து புதுக் கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடமும் பாதிக்கப்பட்ட ஆசிரி யர்கள் மனு அளித்துள்ளனர்.