பாபநாசம், ஆக.17-
பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்தில் நகர்ப்புற உள் ளாட்சி பிரநிதிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
பயிற்சிக்கு பாபநாசம் ஒன்றியக்குழுத் தலைவர் சுமதி தலைமை வகித்தார். பாபநாசம் வட்டார வள மையம் மேற்பார்வையாளர் (பொறுப்பு) முருகன் வரவேற்றார். கருத்தாளர்கள் சரவணன், பிரவினா பங்கேற்று உள்ளாட்சி பிரநிதிகள் பொறுப்பு, கடைமைகளை அறிந்து செயல்பட வேண்டும். பள்ளி வளர்ச்சி, அதன் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பில் உள்ளாட்சி அமைப்பு கள் தங்களது பங்கை மேம்படுத்த வேண்டும் என வலி யுறுத்தினர்.
பயிற்சி முகாமில் பாபநாசம், அய்யம்பேட்டை, அம்மாப்பேட்டை, மெலட்டூர் பேரூராட்சிகளை சேர்ந்த 51 உறுப்பினர்கள் பங்கேற்றனர்.