districts

img

திருச்சி, கரூர், தஞ்சாவூரில் வாழ்வாதாரக் கோரிக்கை மாநாடு

திருச்சிராப்பள்ளி, பிப்.19- திருச்சிராப்பள்ளி மாவட்ட ஜாக்டோ-ஜியோ சார்பில் வாழ்வா தார உரிமை மீட்பு மாவட்டப் போராட்ட ஆயத்த மாநாடு ஞாயி றன்று திருச்சிராப்பள்ளியில் நடை பெற்றது. மாவட்ட ஒருங்கி ணைப்பாளர்கள் நாகராஜன், உது மான்அலி, பழனிச்சாமி ஆகியோர்  தலைமை வகித்தனர். மாவட்ட  ஒருங்கிணைப்பாளர் நீலகண்டன்  முன்னிலை வகித்தார். கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பெரிய சாமி, ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக்  குழு உறுப்பினர்கள் தியாகராஜன்  ஆரோக்கியராஜ் ஆகியோர் பேசி னர்.  மாநில ஒருங்கிணைப்பாளர் மயில் சிறப்புரை ஆற்றினார்.  மாநாட்டில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய  ஓய்வூதியத் திட்டத்தை அமல்  படுத்த வேண்டும், இடைநிலை ஆசி ரியர்கள்- முதுநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும், முடக்கப்பட்ட அக விலைப்படி நிலுவைத் தொகை, சரண்டர், உயர்கல்விக்கான ஊக்க  ஊதியம் உள்ளிட்டவற்றை உடனே  வழங்க வேண்டும். தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதி யத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள்,  சத்துணவு ஊழியர்கள், அங்கன்  வாடி பணியாளர்கள், எம்ஆர்பி செவிலியர், வருவாய் கிராம உதவி யாளர்கள் மற்றும் ஊர் புற நூல கர் உள்ளிட்டோருக்கு காலமுறை  ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீமானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக  மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமர வேல் வரவேற்றார். பால்பாண்டி நன்றி கூறினார்.

கரூர்

கரூரில் நடைபெற்ற ஜாக்டோ-  ஜியோ  மாநாட்டிற்கு மாவட்ட  ஒருங்கிணைப்பாளர் மு.சுப்பிர மணியன் தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் பொ. அன்பரசன் சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக  அலுவலர்கள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் பொன்ஜெயராம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் மு. செல்வராணி, தமிழ்நாடு ஆரம்  பப்பள்ளி  ஆசிரியர் கூட்டணி மாவட்  டச் செயலாளர் ஜ.ஜெயராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ப.தமிழ்மணியன், சு.வேலுமணி, பா.பெரியசாமி, வி.ஆரோக்கிய பிரேம்குமார், கெ.சக்திவேல் உட் பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூரில்  நடைபெற்ற மாநாட்டிற்கு மாவட்ட ஒருங்கி ணைப்பாளர்கள் எஸ்.பன்னீர் செல்வம், பி.இளையராஜா, இ. சத்தியசீலன், ஏ.ரெங்கசாமி ஆகி யோர் தலைமை வகித்தனர். தமிழ்  நாடு சத்துணவு ஊழியர் சங்கம் மாநிலப் பொதுச்செயலாளர் அ. மலர்விழி சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு பல்கலைக்கழக கல்லூரி எஸ்.சி, எஸ்.டி ஆசிரியர்  நலச் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் எம்.கண்ணையன், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரி யர் மன்றத்தின் மாநிலச் செயலா ளர் என்.கிட்டு, தமிழக ஆசிரியர்  கூட்டணி மாநிலத் துணைத்தலை வர் ஏ.எழிலரசன், தமிழ்நாடு சத்து ணவு ஊழியர் சங்க மாவட்டச் செய லாளர் டி.ரவிச்சந்திரன், முன்னாள் படை வீரர் நலத்துறை நிர்வாக ஊழி யர் சங்க மாநிலப் பொதுச் செய லாளர் டி.இளங்கோவன், தமிழ்  நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.ரவிச்சந்திரன், தமிழ்  நாடு அரசு அனைத்து மருந்தாளு னர் சங்க மாநிலச் செயலாளர் கே. பாஸ்கரன், அரசு பணியாளர் சங்க  மாவட்டச் செயலாளர் தரும.கரு ணாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருவாரூர்

திருவாரூரில் மாவட்ட ஒருங்கி ணைப்பாளர்கள் வெ.சோமசுந்த ரம், ஆர்.முத்துவேல், ஆர்.சத்திய மூர்த்தி, ச.சண்முகவடிவேல், அ. முரளி தலைமையில்  மாநாடு நடை பெற்றது. ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் ஆர்.தாமோ தரன் முன்னிலை வகித்தார். நடை பெற்றது.  ஜாக்டோ ஜியோ மாநில உயர்நிலைக் குழு உறுப்பினரும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசி ரியர் மன்றத்தின் மாநிலத் தலை வருமான பெ.இரா.இரவி உள் ளிட்டோர் கலந்து கொண்டார்.