தஞ்சாவூர், ஏப்.21-
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையைச் சேர்ந்த வர் வேலுச்சாமி (49). கூலித் தொழிலாளி. இவர் 2016- ஆம் ஆண்டு மார்ச் 5 அன்று பட்டுக்கோட்டை அருகே உள்ள தனது நண்பரின் வீட்டுக்கு வந்த போது, 6 வயது சிறு மிக்கு, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் தாய் பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகா ரின் பேரில் வழக்கு பதிவு செய்து வேலுச்சாமியை கைது செய்தனர்.
இந்த வழக்கு தஞ்சாவூர் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி வேலுச் சாமிக்கு ஆயுள் தண்டனை விதித்தும், பாதிக்கப்பட்ட சிறு மிக்கு ரூ.5 லட்சம் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என வும் உத்தரவிட்டார்.