districts

img

அதானி, அம்பானிக்கு துணைபோகும் பாஜக ஆட்சியை வீழ்த்துவோம் சிஐடியு பிரச்சாரக் கூட்டத்தில் எஸ். கண்ணன் பேச்சு

ராணிப்பேட்டை,  மே 25-

   அதானி, அம்பானிக்கு துணைபோகும் பாஜக ஆட்சியை வீழ்த்துவோம் என ராணிப்பேட்டையில் நடைபெற்ற சிஐடியு பிரச்சார  கூட்டத்தில் மாநில துணைப்  பொதுச் செயலாளர் எஸ். கண்ணன் பொதுமக்களுக்கு வேண்டு கோள் விடுத்தார். ஒப்பந்தத் தொழி லாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் நடைபெறும் நடை பயண பிரச்சார பயணக் குழு  விற்கு ராணிப்பேட்டை ஆற்காடு அண்ணா சிலை அருகே உற்சாக வர வேற்பளிக்கப்பட்டது.

    அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எஸ்.கண்ணன் பேசுகையில், மோடி ஆட்சிக்கு வந்த பின்பு  சமையல் எரிவாயு விலை 600  ரூபாய் வரை உயர்ந்து உள்ளது. பெட்ரோ, டீசல்  விலை உயர்ந்து கொண்டே  இருக்கிறது. இதனால் அத்தி யாவசியப் பொருட்களின்  விலையும் உயர்ந்து கொண்டே போகிறது. இத னால் சாமனிய ஏழை எளிய  மக்கள், சாலை யோர வியா பாரிகள், கூலித் தொழிலாளர் கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர்.

   விவசாயிகளின் விளை  நிலத்தை அழித்து, விவசாயி களின் வாழ்வாதாரத்தை சீரழித்து பன்னாட்டு நிறுவ னங்கள் இயற்கை வளங்களை கொள்ளை அடிக்க ஒன்றிய அரசு துணை  போகிறது. மோடி ஆட்சி யில் வேலை யின்மை அதி கரித்து வருகிறது. இதனால் சமூக குற்றங்களும் அதி கரித்து வருகின்றன. தொழி லாளர்களை, ஏழை எளிய மக்களை குறித்து மோடி அரசுக்கு கவலையில்லை. அவர்களுடைய கவலை யெல்லாம் அம்பானி, அதானி குறித்துதான். அத னால்தான் பல லட்சம் கோடி  ரூபாய்களை மோடி அரசு அவர்களுக்கு தள்ளு படி செய்கிறது. எனவே வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து தரப்பு மக்களும் பாஜகவை முறியடிக்க முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    இதில் ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் ஆ.தவராஜ், ராமச்சந்திரன், சிபிஎம் மாவட்டச் செய லாளர் என்.காசிநாதன், வாலாஜா தாலுகா செய லாளர் ஆர்.மணிகண்டன், ஆற்காடு தாலுகா செய லாளர் செல்வம், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ம. கோவலன், பொருளாளர் கலைவாணன், அங்கன் வாடி ஊழியர்கள் சங்க மாநில இணைச் செய லாளர் அமிர்தவள்ளி, மாவட்டப் பொருளாளர் மாலதி, சகோதர சங்கங்களின் நிர் வாகிகள் ரவிச்சந்திரன், டி. சந்திரன், பி.ரகுபதி, தா. வெங்கடேசன், ஜெயக்குமார்,  மணி, பாபு, இன்ப நாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.