துக்கோட்டை, ஜூன் 23-
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண் குழந்தை களை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின், புதுக்கோட்டை மாவட்ட அளவிலான செயலாக்க குழுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் வியாழக்கிழமை நடை பெற்றது. இதில், மாவட்ட சட்ட பணிகள் ஆலோசனைக் குழு செயலாளர் சார்பு நீதிபதி இ.ராஜேந்திரகண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.கவிதப்பிரியா, மாவட்ட சமூக நல அலுவலர் க.ந.கோகுலப்பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.