தஞ்சாவூர், மே 27-
தஞ்சாவூர் பிரின்ஸ் லயன்ஸ் சங்கம் வழங்கும், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக லியோ சங்கம் துவக்க விழா மற்றும் பணி யேற்பு விழா பனுவல் அரங்கில் நடைபெற்றது. விழாவில் பிரின்ஸ் லயன்ஸ் சங்க தலைவர் பி.எல்.சோமசுந்தரம் வரவேற்றார். பல்கலைக் கழக துணைவேந்தர் வி.திருவள்ளுவன் தலைமை வகித்தார். இதில், லியோ சங்க சட்ட திட்டங்களையும் அதன் செயல்பாடுகளையும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்,
லயன்ஸ் மாவட்ட ஆளுநர் ஏ.ஆர்.கே.சேது சுப்பிரமணியன் லியோ சங்கத்தினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். மாவட்ட இரண் டாம் துணை ஆளுநர் லயன்ஸ் ஏ.சவரிராஜ், லியோ சங்கத்தின் உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து சிறப்புரையாற்றினார்.
லியோ மாவட்டத் தலைவர் லயன்ஸ் ஜி.ரவிச் சந்திரன் இலச்சினை வழங்கினார். லயன்ஸ் சங்க நிர்வாகிகள் வி.பி.சுமங்கிலி செல்வராஜ், டாக்டர் ஸ்டாலின், டி.கருணைக்கடல், தமிழ்ப் பல்கலைக்கழக கலைப்புல முதன்மையர் பேரா சிரியர் பெ.இளையாப்பிள்ளை ஆகியோர் வாழ்த்திப் பேசினர். தமிழ்ப் பல்கலை., நாடகத் துறைத் தலைவரும் லியோ சங்க ஆலோச கருமான முனைவர் சி.வீரமணி நன்றி கூறி னார்.