districts

சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பு பணியிடங்கள்

புதுக்கோட்டை, ஜூன் 7-

     புதுக்கோட்டை மாவட்ட சட்டப் பணிகள் ஆணை யத்தின் கீழ் இயங்க உள்ள சட்ட உதவி பாதுகாப்பு ஆலோ சனை அமைப்பு (Legal Aid Defense Counsel System) அலுவலகத்தில் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு, நேர்  காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப் பட்டு, 5 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.  

    புதிதாக உருவாக்கப்படவுள்ள இப்பதவிகளுக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகின்றன. இதுகுறித்த முழு விவரங்கள் https: //districts.ecourts.gov.in/pudukkottai என்ற இணையதளத்தில் ‘‘Announcement’’ என்ற தலைப்பில் விவரமாக குறிப்பிடப்பட்டுள்ளது.  

    விருப்பமுள்ள தகுதிவாய்ந்த நபர்கள் விண்ணப் பத்தை பூர்த்தி செய்து ஜூன் 12 அன்று மாலை 5 மணிக் குள் தலைவர், முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணையம், புதுக்கோட்டை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இறுதி நாளுக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

    தகுதியான விண்ணப்பங்களின் அடிப்படையில் சம்  பந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள் ஜூன் 15 அன்று 10 மணிக்கு  புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளா கத்திற்குள் இருக்கும் சமரச தீர்வு மைய அலுவலகத்தில் (ADR Building) நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்  யப்படவுள்ளதாக முதன்மை மாவட்ட நீதிபதி நாராய ணன் தெரிவித்துள்ளார்.