districts

img

விஷவாயு தாக்கி பலியானோர் குடும்பத்திற்கு தலைவர்கள் ஆறுதல்

சிதம்பரம், மே 16-

    கடலூர் மாவட்டம், காட்டு மன்னார்கோவில் அருகே விஷ வாயு தாக்கி பலியானவர்களின் குடும்பத்தினரை சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்கள் ஆறுதல் கூறினர்.

    காட்டுமன்னார்கோவில் அருகே திருமுட்டம் வட்டம், கானூர் கிராமத்தைச் சேர்ந்த பாலச்சந்திரன் வீட்டில் கழிவு நீர் தொட்டி கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தனர். பின்னர் அங்கு பலகைகளைப் பிரிக்க தொட்டிக்குள் இறங்கிய வீட்டின் உரிமையாளர் பாலச்சந்திரன், கட்டு மான தொழிலார்கள் கிருஷ்ணமூர்த்தி, சக்திவேல் ஆகியோர் விஷ வாயுத் தாக்கி மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.

   இதையறிந்த சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, சிதம்பரம் நகர் மன்ற துணைத் தலைவர் எம்.முத்துக்குமரன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.பிரகாஷ், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச் செயலாளர் பழ.வாஞ்சிநாதன், விவசாயத் தொழி லாளர் சங்கத்தின் வட்டத் தலைவர் பொன்னம்பலம், வாலிபர் சங்க வட்டத் தலைவர் தினேஷ் ஆகியோர் இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர்.