மயிலாடுதுறை, மார்ச் 16- தமிழகத்தில் முதல்முறையாக மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் உள்ள அரசு மாதிரி மே நிலைப்பள்ளியில் மொழிகள் ஆய்வகம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த ஆய்வகத்தை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் திறந்து வைத்தனர். அப்போது ஆய்வக வழிமுறைகள் குறித்து மாணவர்களிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டு அறிந்தார். நிகழ்ச்சிக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜகுமார், நிவேதா முருகன், பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி வரவேற்றார். அமைச்சர் மெய்யநாதன், பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், மயிலாடுதுறை உதவி ஆட்சியர் யுரேகா, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், குத்தாலம் ஒன்றியக்குழு தலைவர் மகேந்திரன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் விஜயா ராஜேந்திரன், குத்தாலம் பேரூராட்சி மன்றத் தலைவர் சங்கீதா மாரியப்பன், துணைத்தலைவர் சம்சுதீன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முதன்மைக் கல்வி அலுவலர் ரேணுகா நன்றி கூறினார். நிகழ்வில் பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்காக மாணவர் கையாளும் மொழி ஆய்வகங்கனை நிறுவி வருகிறது. 2023-2024?M;k கல்வியாண்டில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் சரளமாக ஆங்கில மொழியைக் கையாளும் திறனை மேம்படுத்துவதில் இந்தத் திட்டம் முக்கிய மைல்கல்லாகும். ரூ.23 கோடி பட்ஜெட்டில், 6,029 உயர்தொழில்நுட்ப ஆய்வகங்களில் உள்ள ஒவ்வொரு கணினிக்கும் இரண்டு இணை ஹெட்செட்கள் வீதம் வழக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள 6,020 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில் உள்ள மொத்தம் 89,680 செயல்படும் நிலையிலுள்ள கணினிகள் மொழி ஆய்வகங்களாகச் செயல்படும். மொழிகள் ஆய்வகங்கள் செய்முறைத் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை சார்பில் பரிசுகள் வழங்கப்படும்” என்றார்.