districts

img

ஜப்தி செய்த விவசாயியின் நிலம், வீடு, பொருட்களை மீண்டும் ஒப்படைக்க வேண்டும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜூன் 21 - திருச்சி புறநகர் மாவட்டம் மணப்பாறை வட்டம் கரும்புலிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி. பன்னீர்செல்வம். இவர் குளித்தலையில் உள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கி ஒன்றில் வாங்கிய கடனை கட்ட முடியாததால் 11 ஏக்கர் நிலம், குடியிருப்பு வீடு மற்றும் வீட்டில் உள்ள பொருள்கள் அனைத்தும் ஜப்தி செய்யப்பட்டுள்ளன. இதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக கண்டித்தும், ஜப்தி செய்த நிலம், குடியிருப்பு வீடு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை விவசாயி பன்னீர்செல்வத்திடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும். வாங்கிய கடனை திரும்பக் கட்ட போதிய தவணை வழங்கி, வசூலிக்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மணப்பாறை பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு சங்க பொறுப்பாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். சங்க புறநகர் மாவட்ட செயலாளர் சிதம்பரம், சிபிஎம் வட்டச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  விவசாயிகள் சங்க வட்டக்குழு உறுப்பினர்கள் பிச்சைக்கண்ணு, பெரியசாமி, அழகர், சிஐடியு பொறுப்பாளர்கள் நவமணி, சுரேஷ், நஸ்ரின்பானு உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

;