districts

img

சிபிஎம் புள்ளம்பாடி ஒன்றியச் செயலாளராக எல்.அருமைதாஸ் தேர்வு

திருச்சிராப்பள்ளி, அக்.15 - சிபிஎம் புள்ளம்பாடி ஒன்றியச் செயலாளராக எல்.அருமைதாஸ் தேர்வு செய்யப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாவட்டம்  புள்ளம்பாடி ஒன்றிய 24 ஆவது மாநாடு  ஞாயிறன்று வடுகர் பேட்டையில் நடந் தது.  மாநாட்டிற்கு தோழர்கள் செல்லதுரை, விஜி, வினோத் குமார் ஆகி யோர் தலைமை வகித்தனர்.  மாநாட்டு கொடியை மூத்த தோழர் யோகராஜ் ஏற்றினார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் நடராஜன் துவக்க உரையாற்றினார்.  மாநாட்டில் புள்ளம்பாடி முழுவதும் உள்ள மதுபான கடைகளை அகற்ற வேண்டும். கட்டுமான பொ ருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். ஏரி, குளங்களை தூர்வார வேண்டும்.  புள்ளம்பாடி ஒன்றி யத்தில் அரசு பருத்தி கொள் முதல் நிலையம் அமைக்க வேண்டும். புள்ளம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்தை தரம் உயர்த்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புள்ளம்பாடி ஒன்றிய குழு செயலாளராக எல்.அரு மைதாஸ் உள்பட 9 பேர் கொண்ட ஒன்றியக்குழு தேர்வு செய்யப்பட்டது.  மாவட்ட செயற்குழு உறுப்பினர் சந்திரன் நிறைவு ரையாற்றினார்.