districts

img

கும்பகோணம் சாஸ்த்ரா பல்கலை.யில் இஸ்ரேல், அமெரிக்கா ஆராய்ச்சி மாணவர்களுக்கு ‘இராமானுஜன் விருது’ வழங்கல்

கும்பகோணம்,  டிச.22 - கணித மேதை சீனிவாச இராமானுஜன் 18 ஆவது சர்வதேச கருத்தரங்கம் மற்றும் சாஸ்த்ரா இராமானு ஜன் விருதுகள் 2022 விழா  கும்பகோணம் சாஸ்தரா  நிகர்நிலைப் பல்கலைக்கழக ஸ்ரீனிவாச இராமானுஜன் மையத்தில் நடைபெற்றது. உலக அளவிலான ஸ்ரீனி வாச இராமானுஜன் 18  ஆவது சர்வதேச கருத்த ரங்கம் மற்றும் சாஸ்த்ரா 2022  இராமானுஜன் விருது வழங் கும் விழாவில், மைண்ட்  ட்ரி இணை நிறுவனர் பார்த்த சாரதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று 2020 மற்றும 2021 ஆண்டிற்கான ஸ்ரீனி வாச இராமானுஜன் விருது களை வழங்கினார். இஸ்ரே லைச் சேர்ந்த ஹுப்ரு பல்க லைக்கழக முனைவர் சாய்  இவெரா மற்றும் அமெரிக்கா வைச் சேர்ந்த கொலம்பியா பல்கலைக்கழக முனைவர் வில் சாவின் ஆகியோர் இவ்விருதினைப் பெற்றனர். இந்த விருதானது தலா 10 ஆயிரம் அமெரிக்க டாலர் மதிப்பிலான தொகை  மற்றும் விருது பட்டயத் தினை உள்ளடக்கியது. இவ் விருது, சாஸ்த்ரா நிகர் நிலைப் பல்கலைக்கழகத் தால் 2005 ஆம் ஆண்டு முதல், உலகளவில் ஸ்ரீனி வாச இராமானுஜனின் எண்ணியலில் சிறப்பாக ஆராய்ச்சி செய்த 32  வயதிற்குட்பட்ட கணித வியல் ஆராய்ச்சியாளர் களுக்கு வழங்கப்படுகிறது. முன்னதாக சாஸ்த்ரா பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் வைத்யா சுப்ரமணியம் வர வேற்று சிறப்பு விருந்தின ருக்கு நினைவுப் பரி சினை வழங்கினார். இவ்விரு தினைப் பெற்ற ஹுப்ரு பல்கலைக்கழக முனைவர் சாய் இவெரா (2020) மற்றும்  அமெரிக்காவைச் சேர்ந்த  கொலம்பியா பல்கலைக் கழக முனைவர் வில் சாவின்  (2021) ஆகியோர் சொற்பொ ழிவாற்றினர். 2022 ஆம் ஆண்டின்  விருதிற்காக தேர்ந்தெடுக் கப்பட்ட அமெரிக்காவைச் சேர்ந்த கலிபோர்னியா பல்கலைக்கழக முனைவர்  யூன்கிங்டேங், இராமானு ஜன் நினைவுக் கருத்தரங் கில், காணொலி வாயிலாக பங்கேற்று, தனது ஆராய்ச்சி தொடர்பான கருத்துகளை பகிர்ந்து கொண்டார். இக் கணித மாநாட்டில் அமெரிக்கா, ஆஸ்திரியா, இஸ்ரேல் மற்றும் இந்திய பல்கலைக்கழகங்களின் 12 கணிதப் பேராசிரியர்கள் உரையாற்றினர். மேலும் 200-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மாணவர்களும், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். ஸ்ரீனிவாச இராமானு ஜன் மையப்புலத் தலைவர்  இராமசாமி நன்றியுரை யாற்றினார்.