மார்த்தாண்டம், ஏப்.23- யுபிஎஸ்சி தேர்வில் குமரி மாவட்டத்தின் சாதனை தொடர்கிறது பள்ளியாடி யைச் சேர்ந்த மாணவன் 792 வது ரேங்க் பெற்றுள்ளார் பள்ளியாடி முருங்க விளையை சேர்ந்த சார்லஸ் இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்று கிறார். ரேசில் ஜெய கீதா இவர் மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரி யில் இயற்பியல் துறை பேரா சிரியராக பணியாற்றுகிறார் இந்த தம்பதியின் மகன் ஹேவிஸ் 24 இவர் நாகர்கோ வில் சி எஸ் ஐ மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தார். அப்பொ ழுது பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 500க்கு 495 மார்க் பெற்று சாதனை படைத்தார் பிளஸ் டூ தேர்வில் 1200 க்கு 1175 மார்க் பெற்று சாதனை தொடர்ந்தது. பின் சென்னை அண்ணா பல்கலைக்கழ கத்தில் பிஇ முடித்தார்.ஆனால் இவர் இன்ஜினியரிங் படித்து முடித்து சாப்ட்வேர் எஞ்சினியர் உட்பட உயர் தரமான கம்பெனியிலிருந்து வேலை வாய்ப்புகள் கிடைத் தும் செல்லாமல் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெறுவது என உறுதியாக இருந்தார் இரண்டு ஆண்டுகள் வீட்டிலிருந்து யூ டியூப் மற்றும் டெஸ்ட் சீரிஸ் தேர்வு கள் எழுதி தொடர்ந்து இரவு பகலாக உற்சாகமாக முயற்சி மேற்கொண்டு தற்பொழுது அகில இந்திய அளவில் 792 வது ரேங்க் பெற்று சாதனை படைத்துள்ளார் விடாமுயற்சியும் கடுமை யான உழைப்பும் திட்டமிட்டு குறிக்கோளை நோக்கி பயணம் மேற்கொண்டால் எதையும் சாதிக்கலாம் என ஹேவிஸ் தெரிவித்தார் விடா முயற்சிக்கு கடவுள் தந்த பரி சாகவே இதை நான் நினைக்கிறேன் என மேலும் கூறினார்.