districts

img

பிளஸ் 2 தேர்வு: திருச்சியில் 14 அரசுப் பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி

 

திருச்சிராப்பள்ளி, மே 7 - பிளஸ் 2 பொதுத் தேர்வில் தஞ்சா வூர் மாவட்டத்தில் 93.46 சதவீதம் பேர்  தேர்ச்சி பெற்றனர். மாவட்டத்தில் 227 பள்ளிகளைச் சேர்ந்த 25,734 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதினர். இவர்களில் 24,052 பேர் தேர்ச்சி பெற்ற னர். தேர்ச்சி விகிதம் 93.46 சதவீதம். தேர்வெழுதிய 11,819 மாணவர்க ளில் 10,710 பேரும், 13,915 மாணவி களில் 13,342 பேரும் தேர்ச்சி பெற்றனர். அதாவது மாணவர்களில் 93.62 சதவீ தம் பேரும், மாணவிகளில் 95.88 சத வீதம் பேரும் தேர்ச்சியடைந்தனர். மாவட்டத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு 95.18 சதவீதம் தேர்ச்சி பெற்ற  நிலையில், நிகழாண்டில் தேர்ச்சி விகிதம் 1.72 சதவீதம் குறைந்துள்ளது. மாநில அளவிலான சராசரி தேர்ச்சி விகிதம் 94.56 சதவீதமாக உள்ள நிலை யில், தஞ்சாவூர் மாவட்டத்தில் அதை யும் விட 1.10 சதவீதம் குறைந்துள்ளது. மேலும், மாநில அளவிலான தேர்ச்சி விகித தர வரிசைப் பட்டியலில் கடந்த ஆண்டு 16 ஆவது இடத்தில் இருந்த நிலையில், நிகழாண்டு 26 ஆவது இடத்துக்கு பின்தங்கியுள்ளது. 54 பள்ளிகள்  நூறு சதவீதம் தேர்ச்சி தஞ்சாவூர் மாவட்டத்தில், பிளஸ் 2  பொதுத் தேர்வில் மொத்தம் 54 பள்ளி கள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளன. இதில், ஆலக்குடி, கரிசவயல், பின்னையூர், உறந்தைரா யன் குடிக்காடு, தெக்கூர், கருக்காடிப் பட்டி, தஞ்சாவூர் மேம்பாலம் அரசு பார்வையற்றோர் மேல்நிலைப்பள்ளி உள்பட 8 அரசுப் பள்ளிகள் நூறு சத வீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. நூறு சத வீதம் தேர்ச்சியிலும் கடந்த ஆண்டு 16 அரசுப் பள்ளிகள் உள்பட மொத்தம் 68  பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற  நிலையில், நிகழாண்டு 54 பள்ளிகளாக குறைந்துள்ளது. அரசுப் பள்ளிகளில்  89.98 சதவீதம் தேர்ச்சி குறிப்பாக, மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. மாவட்டத்தில் சராசரி தேர்ச்சி விகிதம் 93.46 சதவீதமாக உள்ள நிலையில், அரசுப் பள்ளிகளில் 89.98 சதவீதமாக உள்ளது. மாவட்ட சராசரியைவிட அரசுப் பள்ளிகளில் 3.48 சதவீதம் குறைவு. இதேபோல, ஆதிதிராவிடர் நலத் துறை பள்ளிகளில் 51 மாணவ, மாண விகளில் 45 பேர் தேர்ச்சி பெற்று 88.24 சதவீத தேர்ச்சி விகிதத்தையும், மாநகராட்சிப் பள்ளிகளில் 53 பேர்  தேர்வு எழுதியதில் 46 பேர் தேர்ச்சிய டைந்து, 86.69 சதவீத தேர்ச்சி விகி தத்தையும் பெற் றுள்ளன. சுயநிதி மெட்ரிகுலேசன் பள்ளிகளில் 98.50 சதவீதம் பேரும், மாநில அரசின் பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுயநிதிப் பள்ளிகளில் 98.41 சதவீதம் பேரும், அரசு பகுதி உதவிபெறும் பள்ளி களில் 97.29 சதவீதம் பேரும், சமூக நலத் துறையைச் சார்ந்த பள்ளிகளில் 93.75  சதவீதம் பேரும், அரசு முழு உதவி பெறும் பள்ளிகளில் 91.02 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 14 அரசுப் பள்ளிகள்  நூறு சதவீதம் தேர்ச்சி திருச்சி மாவட்டத்தில் 14 அரசுப் பள்ளிகளில் பயின்ற அனைத்து மாணவ,  மாணவியரும் தேர்ச்சி பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் மொத்த முள்ள 258 பள்ளிகளில் 105 பள்ளிகள் அரசுப் பள்ளிகளாகும். இதில் அரசுப் பள்ளிகள் 14, தனியார் பள்ளிகள் 68  என மொத்தம் 82 பள்ளிகள் 100 சதவீத  தேர்ச்சி பெற்றுள்ளன.  அரசுப் பள்ளிகளில் திருத்தலை யூர் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்  பள்ளி, பெருவளப்பூர் அரசு மேல் நிலைப் பள்ளி, கல்லகம் அரசு மேல் நிலைப் பள்ளி, ஓமாந்தூர் அரசு  மேல்நிலைப் பள்ளி, காணக்கிளிய நல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி, டி. முருங்கப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, சின்ன இலுப்பூர் அரசு மேல் நிலைப் பள்ளி, சோழமாதேவி அரசு ஆதி திராவிடர் மேல்நிலைப் பள்ளி, பூங்குடி  அரசு மேல்நிலைப் பள்ளி, திருச்சி கீழரண் சாலை மாநகராட்சி மேல் நிலைப் பள்ளி, பாய்லர் பிளாண்ட் மேல்நிலைப் பள்ளி, புத்தூர் அரசு மகளிர் விழியிழந்தோர் மேல்நிலைப் பள்ளி, தேனேரிப்பட்டி அரசு மேல் நிலைப் பள்ளி, திருச்சி மாவட்ட அரசு மாதிரிப்பள்ளி உள்ளிட்ட 14 பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இவை தவிர, தனியார் பள்ளிகளில் அரசு உதவிபெறும் பள்ளிகள் 6, பகுதி  உதவிபெறும் பள்ளிகள் 14, ஆங்கி லோ இந்திய பள்ளி -1, மெட்ரிக் மற்றும்  சுயநிதி பள்ளிகள் 47 என 68 பள்ளிகள் உள்பட மொத்தம் 82 பள்ளிகள் நூறு சத வீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 7 பாடங்களில்  100 சதவீத தேர்ச்சி பாட வாரியாக மாணவ-மாண விகள் தேர்ச்சி பெற்ற விவரம்: புள்ளியியல் பாடம் - 59 , மைக்ரோ  பயாலஜி -34, பயோ கெமிஸ்ட்ரி - 30,  நியூட்ரிசன் மற்றும் டயட்டீஸ் -69, ஹோம்  சயின்ஸ் - 36, அட்வான்ஸ் தமிழ் - 64,  நர்சிங் பொது பாடம் - 215  ஆகிய பாடங்களை தேர்வெழுதிய 507 மாண வர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது  100 சதவீத தேர்ச்சியாகும். மேலும், தமிழ் பாடத்தில் 99.14  சதவீதம், ஆங்கிலத்தில் 99.01 சதவீதம்,  இயற்பியலில் 99.36 சதவீதம், வேதியிய லில் 99.71 சதவீதம், உயிரியலில் 99.74  சதவீதம், தாவரவியலில் 99.70 சதவீதம்,  விலங்கியலில் 99.41 சதவீதம், கணிதத் தில் 99.05 சதவீதம், கம்ப்யூட்டர் சயின் சில் 99.87 சதவீதம், வரலாற்றில் 99.15 சத வீதம், பொருளியலில் 97.44 சதவீதம், வணிகவியலில் 98.08 சதவீதம், கணக்குப்  பதிவியலில் 97.02 சதவீதம், வணிகக்  கணிதத்தில் 98.22 சதவீதம், கம்ப்யூட்டர்  பயன்பாட்டியலில் 99.13 சதவீதம், புவியி யலில் 99.58 சதவீதம், அரசியல் அறிவிய லில் 99.49 மாணவ-மாணவிகள் தேர்ச்சி  பெற்றுள்ளனர்.

மாநில அளவில் அரியலூர் மாவட்டம் 3 ஆவது இடம்
முதன்மைக் கல்வி அலுவலருக்கு ஆட்சியர் பாராட்டு

அரியலூர், மே 7- தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மார்ச்  மாதம் நடந்து முடிந்து பிளஸ் 2 தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை காலை வெளி யிடப்பட்டன. இதில் 97.25 சதவீதம் பெற்று மாநில அளவில் அரியலூர் மாவட்டம் 3 ஆவது இடத்தை பிடித்துள்ளது. மாவட்டத்தில் 90 பள்ளிகளைச் சேர்ந்த  3,917 மாணவர்கள், 4,301 மாணவிகள் என 8,218 பேர் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதினர். இதில் 3,770 மாணவர்கள், 4,222 மாணவிகள் என 7,992 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சியில் 97.25  சதவீதம் பெற்று, மாநில அளவில் அரிய லூர் மாவட்டம் 3 ஆவது இடத்தை பிடித்து உள்ளது. கடந்தாண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வை  8,739 பேர் எழுதியதில், 8,466  பேர் தேர்ச்சி பெற்றனர். அப்போது 96.88 சதவீதம் பெற்று மாநில அளவில்  10 ஆம் இடத்தை அரியலூர் மாவட்டம் பெற்றது. பள்ளிகள் வாரியாக... அரியலூர் மாவட்டத்தில் 54 அரசுப் பள்ளிகளில் 2,323 மாணவர்கள், 2,214 மாணவிகள் என 4,537 மாண வர்கள் தேர்வு எழுதினர். இதில் 2,199 மாணவர்கள், 2,138 மாணவிகள் என 4,337 பேர் தேர்ச்சி பெற்றனர். அரசுப் பள்ளி தேர்ச்சி சதவீதம் 95.59. 9 அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 538 மாணவர்கள், 863 மாணவிகள் என 1,401 பேர் தேர்வு எழுதி னர். இதில் 538 மாணவர்கள், 863 மாண விகள் என 1,401 பேரும் தேர்ச்சி பெற்ற னர். அரசு உதவிபெறும் பள்ளிகள் தேர்ச்சி சதவீதம் 100. இரண்டு அரசு  ஆதிதிராவிட நல மேல்நிலைப் பள்ளி களில் பயின்ற 39 மாணவர்கள், 40  மாணவிகள் என 79 பேர் தேர்வு எழுதி னர். இதில் 39 மாணவர்கள், 40 மாணவி கள் என 79 பேரும் தேர்ச்சி பெற்றுள் ளனர். 16 மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி களில் 737 மாணவர்கள், 635 மாண விகள் என 1,372 பேர் தேர்வு எழுதி னர். இதில் 736 மாணவர்கள், 635 மாணவிகள் என 1,371 தேர்ச்சி பெற்றுள் ளனர். தேர்ச்சி சதவீதம் 99.93. 9 சுய நிதி மேல்நிலைப் பள்ளிகளில் 155 மாண வர்கள், 73 மாணவிகள் என 228 பேர் தேர்வு எழுதியதில், 155 மாணவர்கள், 73  மாணவிகள் என 228 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  இதில், அரசுப் பள்ளி- 23, அரசு உதவிபெறும் பள்ளி - 6, மெட்ரிக் பள்ளி - 15, சுயநிதி பள்ளி - 9 என மொத்தம்  53 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. அரியலூர் மாவட்டம் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவில் மாநில அளவில் 3 ஆவது இடம் பெற்றமைக்காக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி மற்றும் மாவட்ட கல்வி  அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஜா. ஆனிமேரி ஸ்வர்ணா பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும், மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்தார்.

குமரப்பா பள்ளி நூறு சதவீதம் தேர்ச்சி

தஞ்சாவூர், மே 7-  பிளஸ் 2 பொதுத் தேர்வில் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி டாக்டர் ஜே.ஸி. குமரப்பா செண்டினரி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  இப்பள்ளியில் தேர்வெழுதிய 131 பேரும் தேர்ச்சி பெற்றனர். 571 மதிப்பெண்களுடன் மாணவர் சுகேஷ் முதலிடமும், 570 மதிப்பெண்களுடன் மாணவி ஷோபிகா இரண்டாமிடமும், 553 மதிப்பெண்களுடன் மாணவி ஸ்ரீமதி மூன்றாமிடமும் பெற்றனர். தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு தனியார் பள்ளி தாளாளர்கள் சங்க நிறுவனத் தலைவர் ஸ்ரீதர், நிர்வாக இயக்குநர் நாகூர்பிச்சை, குமரப்பா அறக்கட்டளை செயலாளர் நபிஷாபேகம், பொருளாளர் அஸ்வின் கணபதி, அறங்காவலர்கள் ராமு, கணபதி, ஆனந்தன், மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.