districts

img

ரத்த தானம் செய்தவர்களுக்கு பாராட்டு

கும்பகோணம்,  அக்.15 - தஞ்சாவூர் மாவட்டம்  கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் லயன்ஸ் சங்கம், அரசினர்  ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாண வர்கள் மற்றும் பள்ளி வளர்ச்சி குழு ஜமாத் இஸ்லா மிய ஹிந்த், கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை ஆகிய அமைப்புகள் சார்பில் நாச்சி யார்கோயில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி யில் ரத்த தான முகாம் நடை பெற்றது. முகாமில் பலர் ரத்த தானம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் கும்ப கோணம் அரசு மருத்துவர் சுகந்தி, ரத்த வங்கி பொறுப் பாளர் சலீம், லயன் சங்க தலைவர் ராஜேந்திரன், செய லாளர் முத்து, பொருளாளர் பாலமுருகன், முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் ஷபிகுர்ரகுமான், செயலா ளர் சரவணன், பொருளாளர் சாதிக் பாட்ஷா மற்றும் ஓம் சக்தி ஆட்டோ ஓட்டுநர்கள் பங்கேற்று ரத்த தானம் செய்தனர்.