districts

கடலில் தவறவிட்ட நகை மீட்பு சிப்பி தொழிலாளர்களுக்கு பாராட்டு

தூத்துக்குடி, ஜூன் 6

    திருச்செந்தூர் கடலில் குளிக்கும்போது பக்தர் தவற விட்ட ஒன்றரை பவுன் தங்க நகையை கடலில் தேடி எடுத்து  உரியவரிடம் ஒப்படைத்த சிப்பி அரிக்கும் தொழிலாளர்கள் இருவருக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.  

    மதுரை மாவட்டம் ஆத்திகுளம் பகுதியைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் கடந்த 3ஆம் தேதியன்று  குடும்பத்து டன் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்திருந்தார். அப்போது, அங்கு கடலில் குளிக்கும்போது மேற்படி பெண்மணி அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்க வளையல் கடலில் விழுந்துள்ளது.

   உடனே அங்கு இருந்த திருச்செந்தூர் கோவில்  கடற்கரை பாதுகாப்பு பணியாளரான திருச்செந்தூர் வடக்கு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்க ளான ரத்தினம் மகன் மணிகண்டன் (30) மற்றும் செந்தில் குமார் மகன் ஆறுமுகநயினார் (25) ஆகிய இருவரும் கடலில் விழுந்த ஒன்றரை பவுன் தங்க நகையை கடலில் தேடி திங்களன்று கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்துள்ளனர்.

   தங்க வளையலை கடலில் தேடி எடுத்து உரியவ ரிடம் ஒப்படைத்த மணிகண்டன் மற்றும் ஆறுமுகநயினார் ஆகிய இருவரையும் செவ்வாயன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் வசந்த ராஜ்  திருச்செந்தூர் துணை கண்காணிப்பாளர் அலுவல கத்திற்கு நேரில் அழைத்து அவர்கள் இருவருக்கும் சால்வை அணிவித்து பரிசு வழங்கி பாராட்டினார்.