ருவாரூர், மே.14-
திருவாரூர் மாவட்டம்,குடவாசல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு நன் கொடை வழங்கிய நன்கொடையாளருக்கு பாராட்டு, மாணவிகளுக்கு நினைவுப் பரிசு, இலக்கிய மன்ற நிறைவு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.
பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பா.பிரபாகரன் வரவேற்றார், திரு வாரூர் மாவட்ட பெற்றோர் ஆசிரியர் கழகத் துணைத் தலைவரும்,சட்டமன்ற உறுப்பின ருமான பூண்டி கே.கலைவாணன் தலைமை ஏற்று பரிசுகளை வழங்கினார். பள்ளிக்கு சுற்றுச்சுவர், பள்ளிக்கு வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து கொடுத்த சிங்கப்பூர் தொழிலதிபரும், கை ராத்துன் ஹிஸான் மகளிர் மதரஸா கெளரவத் தலைவர் எம்.அப்துல் கபூரை பாராட்டி நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
ஆசிகா தங்க மாளிகை ஜெகபர் சாதிக், முஹமது அலி கபூர், முஹமது இஸ்மாயில் கபூர், பத்ம நாராயணன், ஆராவமுதன் உள்ளிட்ட நன்கொடையாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேரூராட்சித் தலைவர் மகா லட்சுமி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஆர்.முருகேசன், குடவாசல் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாண விகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பிளஸ்-2 பொதுத்தேர்வில் 575 மதிப்பெண் பெற்ற மாணவி டி.ரதிப்ரியா மற்றும் பாட வாரியாக 100 சதவீதம் மதிப்பெண் எடுத்த மாணவிகளை பாராட்டி நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிரி யர் எம்.ஜீவரேகா நன்றி கூறினார்.