districts

கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்கவில்லை

மதுரை, மே 18-  

    தஞ்சாவூர், கொள்ளிடம் ஆற்றில் மணல்  குவாரி எதுவும் அமைக்கவில்லை. கொள்ளிடம் ஆற்றினை சுத்தம் செய்து 25 இடங்களில் குடிநீர் எடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

   தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த  ஜீவகுமார் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை யில் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.  

   அந்த மனுவில், ‘‘தஞ்சாவூர் மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் அமைந்துள்ள கல்லணை 2000 ஆண்டுகளுக்கு முன்பு கரிகால சோழனால் கட்டப்பட்டது. இந்  நிலையில், கல்லணை அருகே 25 இடங்க ளில் மணல் குவாரி அமைப்பதற்காக தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை முன்னெ டுத்து வருகிறது. இதனால் கல்லணை பாதிக்கப்படும் சூழல் உள்ளது.

  மேலும் டெல்டா பகுதியில் உள்ள விவசாயிகள் பாதிக்க அதிக வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே கொள்ளிடம் பகுதியில் மணல் குவாரிக்கு அனுமதி கொடுத்த தால் தான் கல்லணை பாலம் சேதமடைந் தது. கொள்ளிடம் பகுதியில் மணல் குவா ரிக்கு அனுமதி வழங்கக்கூடாது என அதி காரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நட வடிக்கையும் இல்லை.

   எனவே, தஞ்சாவூர் கொள்ளிடம் பகுதி யில் 25 இடங்களில் மணல் குவாரி அமைப்ப தற்கான நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்கவும், பாரம்பரியமான கல்  லணை அணையை காப்பாற்ற கொள்ளி டம் பகுதியில் மணல் குவாரிக்கு அனுமதி வழங்கக் கூடாது என உத்தரவிட வேண்டும்’’ என கூறியிருந்தார்.

   இந்த மனு உயர்நீதிமன்ற (பொ) தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி விக்டோ ரியா கௌரி அமர்வு முன்பு புதனன்று விசா ரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைத்தால் பாரம்பரியமான கல்லணை சேதம் அடைய வாய்ப்பு உள்ளது என தெரிவித்தனர்.

   கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி எது வும் அமைக்கப்படவில்லை. கொள்ளிடம் ஆற்றினை சுத்தம் செய்து 25 இடங்களில் குடிநீர் எடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

  இதனையடுத்து நீதிபதிகள், கொள்ளி டம் ஆற்றில் எந்த மணல் குவாரியும் அமைக்கப்படவில்லை என அரசு தரப்பில் தெரிவித்த பதிலை பிரமாண பத்திர மாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு  விசாரணையை ஜூன் முதல் வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.