திருச்சிராப்பள்ளி, அக்.3 - திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவ லக கூட்டரங்கங்களில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சி யர் பிரதீப்குமார் தலைமையில் திங்க ளன்று நடந்தது. கூட்டத்தில் திருவெள்ளறை அரசு மேல்நிலைப்பள்ளி கல்வி மேலாண் மைக் குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனுவில், “திருவெள்ளறை அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பொறுப்பேற்ற குறுகிய காலத்திலேயே பள்ளியின் இடிந்த சுற்றுச்சுவரை கட்டி முடித்தது. பள்ளி யின் தேர்ச்சி விகிதத்தை 97 சதவீத மாக உயர்த்தியது. பள்ளியில் டிஎன்பி எஸ்சி தேர்வை நடத்த அனுமதி வாங்கி யது. குடிதண்ணீர் வசதி ஏற்படுத்தி யது. இடிந்து கிடந்த இருபாலர் கழிப்பறையை சீரமைத்தது போன்ற பணிகளை சிறப்பாக செய்து வந்தார். இந்நிலையில் அவர் மீது பொய் யான புகார்களை எழுதி இடமாற்றம் செய்ய வலியுறுத்தி வருகின்றனர். எனவே மாணவர்களின் நலன் கருதி தலைமை ஆசிரியரின் இடமாறுதலை நிறுத்த வேண்டும்” என கூறியிருந்த னர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநகர் மாவட்டச் செயலாளர் சேது பதி தலைமையில் ஸ்ரீரங்கம் அம்பேத் கர் நகர் பகுதியை சேர்ந்த 35 குடும்பத் தினர் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனுவில், “திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அம்பேத்கர் நகர் பகுதியில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் காலத்தில் 10-க்கு 12 என்ற அளவில் வீடு ஒதுக்கப்பட்டது. ஆனால் தற்சமயம் குடும்பங்கள் பெரு கியதால் போதிய இடவசதி இன்றி, ஒதுக்கப்பட்ட பகுதிக்கு அருகில் உள்ள நத்தம் புறம்போக்கு பகுதியில் குடிசை அமைத்து கடந்த 10 வருடங்களாக வசித்து வருகிறோம்.
தற்சமயம் அப்பகுதியில் அறிவியல் பூங்கா வந்ததால், எங்களை காலி செய்ய மாநகராட்சியினர் கூறினர். இப்பகுதியில் வசிப்பவர்கள் அன்றாட கூலி வேலை செய்து குடும்பம் நடத்தி வருகின்றனர். எனவே எங்களின் வாழ் வாதாரத்தை கருத்தில் கொண்டு எங்க ளது குடியிருப்புகளை அகற்றும் ஆணையை மறுபரிசீலனை செய்யு மாறு கேட்டுக் கொள்கிறோம்” கூறி யிருந்தனர். திருச்சி திருவெறும்பூர் தாலுகா கீழக்குறிச்சி ஊராட்சி அடைக்கல அன்னை நகர் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனுவில், “அண் மையில் காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் கடந்த மாதம் முதல் அடைக்கல அன்னைநகர் பகு திக்கு குடிநீர் வழங்குவதில் தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி களிடம் கேட்டால் கொள்ளிடம் ஆற்றில் கூட்டு குடிநீர் திட்டத்திற்காக போடப் பட்டுள்ள இரண்டு நீர் ஊற்று கிணறு களில் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கொள்ளிடத்தில் நீர்வற்றிய பின்தான் சரிசெய்ய முடியும் என்கின்ற னர். மேலும் திருச்சி மாநகராட்சிக்கு வரும் குடிநீர் குழாய்க்கு அருகிலும், பாதாள சாக்கடை அமைக்கும் பகு திக்கு பக்கத்திலும் இப்பகுதிக்கு குடிநீர் வரும் குழாய் உள்ளது. இதனால் தினம் ஒரு இடத்தில் குழாய் உடைவதும், அத னால் குடிநீர் வழங்குவது பாதிப்பு ஏற்ப டுவதும் அடிக்கடி நடக்கிறது. எனவே எங்கள் பகுதிக்கு தங்குதடையின்றி குடிநீர் வழங்க மாவட்ட ஆட்சியர் உத்தர விட வேண்டும் என கோரியுள்ளனர்.