districts

img

கரூர் திருச்சி நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற வேண்டும்

கரூர், ஜூன் 12 -

    தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் குளித்தலை  8 ஆவது உட்கோட்ட மாநாடு நெடுஞ்சா லைத்துறை அலுவலகம் முன்பு நடை பெற்றது.  

    உட்கோட்ட தலைவர் வி.பழனி வேல் தலைமை வகித்தார். உட்கோட்ட இணைச் செயலாளர் ஏ.குணசேகரன் வரவேற்று பேசினார். மாவட்டத் தலை வர் செவந்தலிங்கம் சங்க கொடியை  ஏற்றி வைத்து பேசினார். தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியா ளர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் டி.ராஜமாணிக்கம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் மு.செல்வராணி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் வி.பழனிச்சாமி,  மாவட்டச் செயலாளர் பி.பழனிச்சாமி, மாவட்ட பொருளாளர் எல்.பாலசுப்ர மணி,  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தின் குளித்தலை வட்ட தலைவர் பாண்டிகண்ணன், வட்ட செயலாளர் பரிமளம் உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர்.

    குளித்தலையில் இருந்து மணப் பாறை செல்லும் வழியில் சுங்ககேட்டில்  உள்ள திருச்சி - கரூர் ரயில்வே கேட்டில் மேம்பாலம் கட்டி தர வேண்டும்.  கரூர், சென்னை செல்வதற்கு பகல் நேரத்தில் புதிய ரயில் சேவை தொடங்க  வேண்டும். கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து அதிகமாக உள்ளதால், நான்கு வழிச்சா லையாக மாற்ற வேண்டும்.  

    சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்து அரசாணை வழங்க வேண்டும். சாலை பணியாளருக்கு தொழில்நுட்ப கல்வி திறன் பெறாத ஊழியர்களுக்கான ஊதியம் ரூ.5200-20,200 தர ஊதியம் 1900 வழங்க வேண்டும். சாலைப் பணியாளர் களுக்கு ஆபத்து படி ஊதியத்தில் 10 சத வீதம் மற்றும் சீருடை சலவைப்படி வழங்கிட வேண்டும். பணியின் போது  உயிரிழந்த சாலை பணியாளர் குடும்பத் தினரின் வாரிசுக்கு நெடுஞ்சாலை துறை யிலே பணி வழங்கிட வேண்டும் என்பன  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

    மேலும், சங்கத்தின் உட்கோட்டத் துணைத் தலைவர் ஆர்.அன்பழகனின் மகள் மோனிஷா, 12 ஆம் வகுப்பில் 598 மதிப்பெண்கள் பெற்று மாநிலத் தில் இரண்டாம் இடமும், மாவட்டத் தில் முதலிடமும் பிடித்து சாதனை புரிந்தார். அவரை மாநில துணை தலை வர்கள் பாராட்டி, நினைவு பரிசு வழங்கி னர். வட்ட இணைச் செயலாளர் டி.நாக ராஜன் நன்றி கூறினார்.