கரூர், நவ.15- சேலம் பாரம்பரிய கலை களின் சங்கமம் அறக்கட் டளை சார்பாக தேசிய அள விலான சிலம்பப் போட்டிகள் சேலம் விநாயகா மிஷன் கிரு பானந்தா வாரியார் தொழில் நுட்ப கல்லூரியில் நடை பெற்றன. 6 பிரிவுகளாக நடை பெற்ற இந்த போட்டிகளில், கரூர் பாரதம் மார்ஷியல் ஆர்ட்ஸ் சிலம்பம் அகாடமி மாணவர்கள் பங்கேற்று 14 தங்கம், 4 வெள்ளி, 4 வெண் கல பதக்கங்களை வென்ற னர். இதில் கரூர் மாவட்டம், புகளூர் காகித ஆலையில் பணிபுரியும் ஆனந்த ஐயப்ப னின் மகன் குகன் கார்த்திக் கேஸ்வரன் (8) 6 போட்டி களில் பங்கேற்று 5 தங்க பதக்கங்களும், 1 வெண் கலப் பதக்கமும் வென்றார். மேலும் இடைவிடாது ஒரு மணி நேரம் சிலம்பம் சுழற்றி, இந்தியா புக் ஆப் ரெக் கார்ட்ஸ் என்ற சாதனை புத்த கத்திலும் இடம் பிடித்தார். வெற்றி பெற்ற மாண வனை பாரதம் மார்ஷியல் ஆர்ட்ஸ் சிலம்ப அகாடமி நிறு வனர் கலைசுடர்மணி, ஆசான் கிருஷ்ணராஜ் மற்றும் கரூர் அமெச்சூர் சிலம்ப சங்கம் செயலாளர் செளந்தரராஜன் மற்றும் போட்டி ஒருங்கி ணைப்பாளர் சேலம் கராத்தே நடராஜ் ஆகியோர் பாராட்டி னர். இந்த மாணவர் ஏற்க னவே, 16.10.22 அன்று கரூ ரில் நடைபெற்ற மாஸ்டரி புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை நிகழ்ச்சியில் ஒரு மணி நேரம் 30 நிமிடங்கள் இடைவிடாது தொடர்ந்து சிலம்பம் சுழற்றி உலக சாதனை புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் படித்து வருகின்ற டிஎன்பிஎல் பள்ளியில் நவ. 14 அன்று நடைபெற்ற குழந் தைகள் தின சிறப்பு நிகழ்ச்சி யில், காகித ஆலை செயல் இயக்குனர் கிருஷ்ணன், பள்ளியின் தாளாளர் சீனி வாசன், பள்ளி முதல்வர் அய் யப்பன் மற்றும் ஆசிரியர்கள் மாணவர் குகன் கார்த்திக் கேஸ்வரனை பாராட்டினர்.