districts

img

கரூர் பரணி வித்யாலயா பள்ளி மாணவர் சாதனை

கரூர், ஜூன் 27-

    கரூர் பரணி வித்யாலயா பள்ளி இரண்டாம் வகுப்பு சாரண  மாணவர் திவ்யதர்ஷன் ஆங்கி லத்தில் மிக நீளமான பத்து வார்த்தைகளை நாற்பது நொடிகளி லும் 247 தமிழ் எழுத்துக்களை 28 நொடிகளிலும் கூறி டிஸ்கவர் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றார்.

    திவ்யதர்ஷனுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவிற்கு பரணி பார்க் சாரணர் மாவட்டத் தலைவர் எஸ். மோகனரங்கன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பத்மாவதி மோகனரங்கன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு மாநில சாரணர் உதவி ஆணை யர் சி.ராமசுப்பிரமணியன் சிறப்பு ரையாற்றினார். பரணி பார்க் சார ணர் மாவட்டத் துணைத் தலைவர் எம்.சுபாஷினி, பரணி வித்யாலயா முதல்வர் எஸ்.சுதாதேவி, துணை முதல்வர் ஆர்.பிரியா, பரணி பார்க்  முதல்வர் கே.சேகர், எம்.குமாரசாமி  கல்வியியல் கல்லூரி முதல்வர் பி.சாந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

   உலகச் சாதனை நிகழ்வில் டிஸ்கவர் உலக சாதனைப் புத்தக நடுவர் பாலாஜி கலந்து கொண்டு திவ்யதர்ஷனின் சாதனைகளை டிஸ்கவர் உலக சாதனைப் புத்த கத்தில் பதிவு செய்தார்.