மயிலாடுதுறை, ஜூன் 20-
பாதியில் நிறுத்தப் பட்டுள்ள கருமாதி மண்டப பணியை உடனே துவங்க கோரி மயிலாடுதுறை நக ராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட் டம் மாப்படுகை கிட்டப்பா பாலம் அருகில் நடைபெற்ற கருமாதி மண்டப பணி யினை மீண்டும் துவக்கக் கோரி நடைபெற்ற போராட் டத்திற்கு கட்சியின் மாவட் டச் செயலாளர் பி.சீனிவாசன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஸ்டாலின், எஸ்.துரை ராஜ், ப.மாரியப்பன், டி.சிம் சன், ஏ.ரவிச்சந்திரன், சி. விஜயகாந்த், கே.பி.மார்க்ஸ், மயிலாடுதுறை ஒன்றிய செயலாளர் டி.ஜி.ரவி, நகர பொறுப்பு செயலாளர் ஏ.ஆர்.விஜய் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
ஒன்றியச் செயலாளர் கள், மாவட்டக்குழு, ஒன்றி யக் குழு உறுப்பினர்கள், மாப்படுகை கிராம பொது மக்கள் ஏராளமானோர் போராட்டத்தில் பங்கேற்ற னர்.
மாப்படுகை கிட்டப்பா பாலம் அருகில் சுடுகாட்டில் கருமாதி மண்டபம் உள் ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில், பல் வேறு போராட்டங்களுக்கு பிறகு நகராட்சி மூலம் மண்ட பம் கட்ட கட்டுமானப் பணி கள் துவங்கின. இந்நிலை யில், முன்னாள் எம்.எல்.ஏ ஜெகவீரபாண்டியன் என்பவ ரின் தூண்டுதலின் பேரில் கட்டுமான பணியை பாதி யிலேயே நிறுத்தியுள்ளனர்.
கருமாதி மண்டபம் பணி யை துவங்கக் கோரி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் ஜனநாயக அமைப்புகளும், பொதுமக் களும் நடத்திய பல கட்ட போராட்டத்திற்கு பிறகு, கடந்த 10.4.2023 அன்று நக ராட்சி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத் தப்பட்டது. நகராட்சி நிர்வா கத்தால் ஒரு வார காலத்திற் குள் அதே இடத்தில் வேலை துவங்கிவிடும் என்று எழுத் துப் பூர்வமாக உறுதி அளிக் கப்பட்டது. ஆனால், 60 நாட் களை கடந்தும் இதுவரை எந்த பணியும் துவக்க வில்லை.
தொடர்ந்து 30 ஆண்டு காலமாக இதற்கான பணி யை தடுத்துவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன் அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இவருக்கு துணையாக நகராட்சி மற் றும் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து செயல்பட்டு வரு வதாக குற்றம்சாட்டினர். மேலும், கருமாதி மண்ட பம் கட்டிய இடத்திலேயே மீண்டும் பணிகளை துவங் கும் வரை போராட்டத்தை தொடர போவதாக அறி வித்து நகராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடு பட்டனர்.