திருவாரூர், ஜூலை 22 -
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் திருவாரூரில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் எஸ்.தம்புசாமி தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் கே.தமிழ்செல்வி, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் மாவட்ட நிர்வாகிகள் கூறு கையில், “நடப்பாண்டு டெல்டா மாவட் டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12 அன்று திறக் கப்பட்டது. பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்பட்ட போது நீர்மட்டம் 113 அடியாக இருந்தது. தற்போது ஒரு மாதம் கடந்த பின்பு 75 அடிக்கு கீழ் அணையின் நீர்மட்டம் சரிந்துள்ளது. இந் நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்த பயிர்களுக்கு போதிய தண்ணீர் இல்லாத நிலை உள்ளது. கடைமடை பகுதிகளுக்கு முழுமையாக தண்ணீர் செல்லவில்லை.
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழ கத்திற்கு ஜூன் மாதம் 9.19 டிஎம்சி தண்ணீரை கர்நாடக மாநிலம் கொடுத் திருக்க வேண்டும். ஆனால் 2.9 டிஎம்சி தண்ணீர்தான் வந்துள்ளது. ஜூலை மாதம் வழங்க வேண்டிய தண்ணீரை யும் வழங்காமல் உள்ளனர். காவிரி டெல் டாவில், கர்நாடக மாநிலம் கொடுக்க வேண்டிய தண்ணீர் முறையாக கொடுத் தால்தான் சாகுபடியை பாதுகாக்க முடியும்.
எனவே டெல்டா மாவட்ட குறுவை சாகுபடியை பாதுகாக்க உடனே கர்நாடகா அணையிலிருந்து தண்ணீர் திறப்பதற் கான நடவடிக்கையை, காவிரி நதிநீர் ஆணையமும் ஒன்றிய அரசும் எடுக்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக காவிரியின் குறுக்கே மேக தாதுவில் அணை கட்டுவோம் எனக் கூறும் கர்நாடக அரசை கண்டித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திருவாரூர் மாவட்ட, வட்டத் தலைநகரங்களில் ஜூலை 25 அன்று பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெ றும். திருத்துறைப்பூண்டி ஆர்ப்பாட்டத் தில் சங்கத்தின் மாநில பொதுச் செய லாளர் சாமி.நடராஜன் பங்கேற்கிறார் என சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.சேகர், தலைவர் எஸ்.தம்புசாமி ஆகியோர் கூட்டாக தெரிவித்தனர்.