districts

தலையில் குண்டு பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு துப்பாக்கி குண்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்

தஞ்சாவூர், ஜன.4 - புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தா மலை அருகே சிஐஎஸ்எப் மற்றும் காவல் துறையினர் துப்பாக்கி சுடும் பயிற்சி யில் ஈடுபட்டபோது, சிறுவனின் தலை யில் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரி ழந்த சிறுவனின் உடலில் வேறு ஏதும் குண்டுகள் உள்ளதா என சிடி ஸ்கேன் பரிசோதனை மற்றும் இரண்டு மணி நேரம் உடற்கூராய்வு நடைபெற்றது. நார்த்தாமலை அருகே பசுமலைப் பட்டியில் தமிழக காவல் துறையின் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் கடந்த டிச.30 ஆம் தேதி நடைபெற்ற பயிற்சி யின் போது வெளியான துப்பாக்கி குண்டு ஒன்று 2 கிலோ மீட்டர் தொலை வில் பாட்டி வீட்டுக்கு வந்த கொத்த மங்கலப்பட்டியைச் சேர்ந்த சிறுவன் புக ழேந்தியின் (11) தலையில் பாய்ந்தது. பலத்த காயமடைந்த சிறுவனை  புதுக்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றபோது, தலையில் குண்டு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு வரப்பட் டார்.

பின்னர் நான்கு மணி நேர அறுவை  சிகிச்சைக்கு பின் மூளைப் பகுதியில் இருந்த குண்டு அகற்றப்பட்டது. ஆனா லும் சிறுவனின் உடல் கவலைக்கிடமாக இருந்த நிலையில் திங்கள்கிழமை மாலை 6.10 மணியளவில் சிறுவன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரி வித்தனர். இதற்கிடையில் அரசு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும். குடும்பத் தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கி டையில் தமிழக அரசு சார்பில் சிறுவ னின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங் குவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறி வித்தார். இதைத் தொடர்ந்து திங்கள்கிழமை  காலை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி யில் டிஎஸ்பி கபிலன் தலைமையில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப் பட்டனர். பிணவறையில் இருந்து சிறுவ னின் உடல் அவசர சிகிச்சை பிரிவுக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு உடலில் குண்டுகள் ஏதும் உள்ளதா என சிடி ஸ்கேன் செய்தனர். பின்னர் காலை 11.30 மணிக்கு உடற் கூராய்வு நடைபெறும் கூடத்துக்கு கொண்டு செல்லப்பட்டு மதியம் 1.30  மணிக்கு சிறுவனின் உடல் வெளியே கொண்டு வரப்பட்டது. 2 மணி நேர சோதனைக்கு பின்னர், பலத்த பாதுகாப் போடு சிறுவனின் உடல் ஆம்புலன்சில் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப் பட்டது.

துப்பாக்கி குண்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்

சிறுவன் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டதிலிருந்து, செவ்வாய்க்கிழமை வரை பெற்றோருக்கு தேவையான உதவிகளையும், சிறுவனின் உடல் நலம்  குறித்தும் மருத்துவர்களிடம் தொடர்ந்து சிகிச்சை தொடர்பானவற்றை கேட்டு  அரசுக்கு தெரியப்படுத்திய கந்தர்வ கோட்டை எம்எல்ஏ எம்.சின்னதுரை (சிபிஎம்) கூறியதாவது:  பசுமலைப்பட்டி துப்பாக்கி சுடும் தளத்தை நிரந்தரமாக மூட வேண்டும். சிறுவனின் தலையில் எடுக்கப்பட்ட துப்பாக்கி குண்டை மருத்துவக் கல்லூரி  நிர்வாகம் காவல்துறையில் வழங்கக் கூடாது. அதனை நீதிமன்றத்தில்தான் ஒப்படைக்க வேண்டும். சிறுவனின் தாய்க்கு வருவாய்த்துறையில் அலுவ லக உதவியாளர் வேலையும், அரசு சார்பில் வீடும் கட்டித் தர வேண்டும் என்றார்.