கும்பகோணம், ஆக.9-
கும்பகோணத்தில் ‘நெருப்பூர் ஆனதே மணிப்பூர்’ கவிதை வாசிப்பு இயக்கம் நடைபெற்றது.
மணிப்பூரில் பழங்குடி பெண்களை இழிவுபடுத்தி, வீடுகளை எரித்து கொலை செய்யும் விரோதிகளை கண்டித்தும் அமைதி நிலவ நடவடிக்கை எடுக்க கோரி யும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் ‘நெருப்பூர் ஆனதே மணிப்பூர்’ என்ற தலைப்பில் கவிதை வாசிப்பு மற்றும் உரைவீச்சு நிகழ்ச்சி தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நகரத் தலைவர் கலைச்செல்வன் தலைமை வகித்தார். மாநில துணை பொதுச் செயலாளர் களப்பிரன், தஞ்சை மாவட்டத் தலைவர் ஜீவபாரதி ஆகி யோர் உரையாற்றினர். இதில் வல்லம்தாஜ்பால், அசோக்குமார், ராஜகோபாலன், சுதா, கவிமுனி உள்ளிட்டோர் மணிப்பூர் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தனர்.