கும்பகோணம், பிப்.20- தஞ்சாவூர் மாவட் டம் கும்பகோணம் அருகே திருவலஞ்சுழி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் தொடக்க விழா மற்றும் கலைஞரின் நூற் றாண்டு விழாவை முன் னிட்டு நூறு பேருக்கு கறவை மாடு வாங்கு வதற்கான கடன் வழங் கும் நிகழ்ச்சி மற்றும் கூட்டுறவு பால் சொசைட்டி திறப்பு விழா நடைபெற்றது. இதில் மாநிலங்களவை உறுப்பினரும் திமுக தஞ்சை வடக்கு மாவட்ட செயலாள ருமான கல்யாணசுந்தரம், கூட்டுறவு பால் சொசைட்டியை திறந்து வைத்தார். திருவ லஞ்சுழி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் குருசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, கறவை மாடு வாங்குவ தற்காக நூறு பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கடன் வழங்கப்பட்டது. இதில் ரூ.35 ஆயிரம் அரசு மானியமாக வழங்கப்பட்டது குறிப் பிடத்தக்கது.