திருச்சிராப்பள்ளி, டிச.5- திருச்சி மாநகராட்சி அலு வலகத்தில் திங்களன்று மாநகராட்சி மேயர் அன்பழ கன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி மாநகர குடியிருப்போர் நலச்சங்கங் களின் கூட்டமைப்பு சார்பில் மாநகர ஒருங்கிணைப்பா ளர்கள் சக்திவேல், லெனின் ஆகியோர் மேயர் அன்பழக னிடம் அளித்த மனுவில், ‘‘திருச்சி - திருவெறும்பூர் மார்க்கத்தில் செல்லும் ரயில்வே பாதையை ஒட்டி திருச்சி மாநகராட்சி வார்டு 44-ல் அமைந்துள்ள நகர்ப் பகுதிகளில் குடியிருக்கும் பொது மக்கள் திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சா லைக்கு செல்வதற்கு மஞ்சத் திடல் ரயில்வே கேட் எண் 321 மற்றும் விவேகானந்தா நகர் அருகில் ரயில்வே கேட் எண் 322 ஆகியவற்றை பயன் படுத்தி வருகின்றனர். இந்த இரண்டு ரயில்வே கேட் வழியாக கடந்து செல் லும் பாதையில் ரயில்வே நிர்வாகத்தால் சுரங்க பாதை அமைக்கும் பணி தொடங் கப்பட்டு நடைபெற்று வரு கிறது. இதனால் தற்போது இப்பாதைகள் இரண்டும் முற்றிலும் தடை செய்யப் பட்டுள்ளன. இந்நிலையில், இப்பகுதி களில் தற்போது பாதாள சாக்கடை திட்டம் நடை பெற்று வருவதால் சாலை கள் அனைத்தும் குண்டும் குழியுமாக சேதமடைந்துள் ளது. எனவே, கல்கண்டார் கோட்டை சாலையிலிருந்து முருகன் கோயில், மேலகல் கண்டார்கோட்டை, விளாத் தியார் குளம் சாலை மற்றும் நாகம்மை வீதி வழியாக மகாலட்சுமி நகர் வரை செல்லும் பிரதான சாலையை தார்ச்சாலையாக அமைத்து தர வேண்டும்’’ என கூறி யிருந்தனர்.