districts

img

புதுக்கோட்டை மாமன்ற முதல் கூட்டத்தை கே.என்.நேரு, எஸ்.ரகுபதி தொடங்கி வைத்தனர்

புதுக்கோட்டை, அக்.9 - புதுக்கோட்டை மாமன்றத்தின் முதல் கூட்டத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி ஆகியோர் புதன்கிழமை தொடங்கி வைத்து மேயர் திலகவதி செந்திலிடம் மேயருக்கான வெள்ளி செங்கோலினை வழங்கினர். தொடர்ந்து அமைச்சர் நேரு பேசுகை யில்,    புதுக்கோட்டை மாநகராட்சி மாமன்ற முதல் கூட்டத்தினை துவக்கி வைத்து, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், ரூ.18.90 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கட்டப்படவுள்ள புதிய  பேருந்து நிலைய கட்டிட பணி, அம்ரூத் 2.0  திட்டத்தின் கீழ் ரூ.101.34 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள பாதாள சாக்கடை அமைக்கும் திட்டப் பணி மற்றும் ரூ.25.31 கோடி மதிப்பீட்டில் 24 மணிநேரம் குடிநீர் வழங்கும் திட்டப் பணி என ரூ.145.55 கோடி  மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டி துவக்கி  வைக்கப்பட்டது” என்றார். அமைச்சர் ரகுபதி பேசுகையில், “புதிய  பேருந்து நிலையம் கட்டுவதன் மூலம் பொது மக்களுக்கு இடையூறின்றி பேருந்துகள்,  பேருந்து நிலையத்திற்குள் சென்றுவர  முடியும். மேலும், பாதாள சாக்கடை திட்டத்தின் மூலம் கழிவுநீர் கால்வாய்க ளில் வழிந்தோடி சாலைகளில் கழிவு நீர்  தேங்காமல் இருக்கும். குடிநீர் வழங்கும்  திட்டம் பயன்பாட்டிற்கு வரும்பட்சத்தில் அப்பகுதி பொதுமக்களுக்கு 24 மணி நேர மும் சீரான குடிநீர் வழங்கப்படும் வகையில்  திட்டம் செயல்படுத்தப்படும்” என்றார். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் மு. அருணா தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.சின்னர்துரை (கந்தர்வ கோட்டை) மரு.வை.முத்துராஜா (புதுக் கோட்டை), முன்னாள் அரசு வழக்கறிஞர் கே. கே.செல்லப்பாண்டியன், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் தானமூர்த்தி, துணை  மேயர் எம்.லியாகத் அலி, மாவட்ட ஊராட்சிக்  குழுத் தலைவர் த.ஜெயலட்சுமி, முன்னாள் எம்எல்ஏ கவிச்சுடர் கவிதைப்பித்தன் உள்ளிட் டோர் பங்கேற்றனர். முன்னதாக மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் வரவேற்க, ஆணையர் த.நாரா யணன் நன்றி கூறினார்.