தஞ்சாவூர், மே 24-
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி எம்.எஸ். விழா அரங்கில், மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பேராவூரணி, சேது பாவாசத்திரம் ஒன்றியக் குழு நிர்வாகிகள், ஆலோ சனைக் கூட்டம் ஆர்.எஸ். வேலுச்சாமி தலைமை யில் நடைபெற்றது. இதில், மாவட்டச் செயலா ளர் சின்னை.பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கோ. நீல மேகம், ஆர்.மனோகரன் ஆகியோர் ஆலோசனை களை வழங்கினர்.
இக்கூட்டத்தில், விடு தலைப் போராட்ட வீரர், பொதுவுடமை போராளி, இதழாளர், எழுத்தாளர், இலக்கியப் பேச்சாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் கௌரவ தலைவர், இந்திய விடு தலைக்கு முன்பும், பின்பும் பல ஆண்டுகள் சிறையில் தனது வாழ்க் கையை கழித்தவர், தீக்க திர், செம்மலர் முன்னாள் ஆசிரியர் கே.முத்தையா.
பேராவூரணி மண் ணின் மைந்தரான இவர், தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியை அடுத்த குருவிக்கரம்பையில், 1918 ஆம் ஆண்டு ஜனவரி 14 இல் பிறந்தார். தன்னு டைய 85 ஆவது வயதில் 2003 ஆம் ஆண்டு ஜூன் 10 இல் காலமானார். ஜூன் 10 ஆம் தேதி பேரா வூரணியில் அவருடைய நினைவு தினத்தை யொட்டி, பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டம் நடத்து வது, மாநில தலைவர் களை பங்கேற்க வைப்பது என்பன உள்ளிட்ட தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது.