மன்னார்குடி, அக்.23 - மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றிய மாநாடு டி.ஏங்கல்ஸ் ஜோ. தமயந்தி தலைமையில், பாலஈஸ்வரி மண்டபத்தில் ஆர்.குமாரராஜா நினைவு அரங்கில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.என். முரு கானந்தம் நிறைவுரையாற்றி னார். முன்னதாக மூத்த தலைவர் எஸ்.தங்கராசு கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். கே.கோவிந்தராஜ் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கே.தமிழ்மணி மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றி னார். 11 உறுப்பினர்களை கொண்ட புதிய ஒன்றியக் குழுவும், ஒன்றிய குழுவின் செயலாளராக கே.கோவிந்த ராஜுவும் தேர்வு செய்யப் பட்டனர். பேருந்து நிலையம் அருகில் ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் அமைக்கப் பட வேண்டும். ஒன்றிய கிரா மங்களில் உள்ள வடிகால் களை போர்க்கால அடிப் படையில் தூர்வாரி மரா மத்துப் பணிகள் செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.