ஜூலை 18 பெரம்பலூரில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்
பெரம்பலூர், ஜூலை 14 - “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் வட்ட அளவில் மாதந்தோறும் மூன்றாவது புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் மற்றும் அனைத்து மாவட்ட முதல் நிலை அலுவலர்கள் கிராமங் களில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு மக்களின் குறைகளைக் கேட்டறிந்து மனுக்களைப் பெறுகின்றனர்.
இந்நிலையில் ஜுலை மாதம் மூன்றாவது புதன்கிழமை (ஜூலை 17) அன்று மொஹரம் பண்டிகை என்பதால் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின்படி பெரம்பலூர் வட்டத்திற்குட்பட்ட அனைத்து கிராமங்களி லும் நடத்தப்படும் முகாமானது ஜூலை 18 (வியாழக் கிழமை) நடைபெறும்.
அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி மக்களைச் சென்றடைவதை உறுதி செய்ய ஆய்வு மேற்கொள்ளும் பொருட்டு, ஜூலை 18 அன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் அனைத்து மாவட்ட முதல்நிலை அலுவலர்கள் கிராமங்களில் தங்கி களஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்தும், மக்களின் குறைகளைக் கேட்டறிந்து மனுக்கள் பெறவுள்ளனர்.
எனவே கிராம பொதுமக்கள் தங்கள் கிராமத்திற்கு ஆய்வுகள் மேற்கொள்ள வரும் மாவட்ட நிலை அலுவ லரிடம் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அளித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
காதலனுக்கு வேறு திருமணம்
பேராவூரணி அருகேஇளம்பெண் தற்கொலை
தஞ்சாவூர், ஜூலை 14- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே, காதல னுக்கு திருமணம் செய்ய வேறு பெண் பார்த்ததால் மனமுடைந்த காதலி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பேராவூரணி அருகே உள்ள ஊமத்தநாடு கிரா மத்தை சேர்ந்தவர் செல்லமுத்து மகள் வத்சலா (28). இவர் கடந்த 14 ஆண்டுகளாக அதே கிராமத்தை சேர்ந்த இளை ஞர் ஒருவரை காதலித்து வந்தார். இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பிய நிலையில், அந்த இளைஞருக்கு வேறு பெண்ணை திருமணம் செய்ய அவரது குடும்பத்தினர் பெண் பார்த்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த வத்சலா வயலுக்கு அடிப்பதற் காக வீட்டில் வாங்கி வைத்திருந்த களைக்கொல்லி மருந்தை கடந்த ஜூலை 7 அன்று குடித்தார். இதை யடுத்து ஆபத்தான நிலையில், புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சனிக் கிழமை உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது தாயார் சரோஜா பேராவூரணி காவல் நிலையத்தில் புகார் செய்ததன் பேரில், காவல்துறை யினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீட் தேர்வு ரத்து கோரி பேரணி
தஞ்சாவூர், ஜூலை 14- நீட் மருத்துவ நுழைவுத் தேர்வை ரத்து செய்யக் கோரி தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை மாணவர்கள் பேரணியை நடத்தினர்.
தமிழரண் மாணவர்கள் அமைப்பு சார்பில், தஞ்சா வூர் திலகர் திடலில் இருந்து, அன்னை சத்யா விளையாட்டு மைதானம் வரை பேரணி நடைபெற்றது. பேரணிக்கு அமைப்பின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் இ.வே.சீர்த்தி தலைமை வகித்தார். பேரணியை தமிழர் எழுச்சி இயக்கத்தின் பொதுச் செயலாளர் ப.வேலுமணி தொடங்கி வைத்தார்.
நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு ஏன் ரத்து செய்யப்பட வேண்டும் என அமைப்பின் மாவட்ட துணைச் செயலா ளர்கள் வி.தளிர்மொழி, மின்மதி, தமிழர் எழுச்சி இயக்கத் தின் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் வி.குமரவேல், இணைச் செயலாளர் கா.இரா.மகிழன், திருச்சி மாவட்ட இணைச் செயலாளர் தி.தென்றல் ஆகியோர் உரையாற்றினர்.
நெல்லை மாநகராட்சியில் இன்று அவசரக் கூட்டம்
திருநெல்வேலி, ஜூலை 14- நெல்லை மாநகராட்சியில் பொறுப்பு மேயர் கே.ஆர். ராஜூ தலைமையில் திங்கள்கிழமை (ஜூலை 15) அன்று மாநகராட்சி கூட்டம் நடக்கிறது.
நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த சரவணன் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, துணை மேய ராக இருந்த கே.ஆர். ராஜூ பொறுப்பு மேயராக பொறுப் பேற்றுக் கொண்டார்.
இதையடுத்து முதல் முறையாக பொறுப்பு மேயர் ராஜூ தலைமையில் மாநகராட்சி சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் திங்கட்கிழமை மாநகராட்சி வளாகத்தில் நடக் கிறது. கடந்த ஜூன் 28 அன்று ஒத்திவைக்கப்பட்ட கூட்டத் தில் உள்ள 1 முதல் 102 தீர்மானங்களும், அவசரக் கூட்டத் தில் உள்ள 1 முதல் 28 தீர்மானங்களும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளன.
கண்ணாடி வேலைப்பாடு பொருட்கள் தயாரிப்பு கட்டணமில்லா பயிற்சி
தஞ்சாவூர், ஜூலை 14- தஞ்சாவூர் மாவட்டத்தில், பாரம்பரிய கைவினைப் பொருளாக உள்ள, தஞ்சாவூர் கண்ணாடித் துண்டு வேலைப்பாடு பொருட்கள் தயாரித்திட கட்டணமில்லா பயிற்சி தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் (பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம்) 22.7.2024 முதல் 2.8.2024 வரை (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) 10 நாட்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்ட நிர்வா கத்தின் சார்பில் நடைபெற உள்ளது.
பதிவு செய்யும் முதல் 30 நபர்களுக்கு மட்டுமே இப்பயிற்சி வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சி முற்றிலும் கட்ட ணமில்லா பயிற்சியாகும். பயிற்சியில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு மதிய உணவு மற்றும் தேநீர் வழங்கப்படும்.
பயிற்சிக்குப் பின் பயிற்சியாளர்கள் உற்பத்தி செய்யும் கண்ணாடித் துண்டு வேலைப்பாடு பொருட்களை இம்மாவட்டத்தில் செயல்படும் தொழிற்கூட்டுறவு சங்கங்கள் மூலமாக கொள்முதல் செய்து விற்பனை செய்திட தேவை யான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
விருப்பமுள்ள, 18 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், தஞ்சாவூர் அலுவ லகத்தில் பணிபுரியும் கு.விஜயகுமார், உதவி இயக்குநர், (தொ.கூ) (கைப்பேசி எண்: 8973521624) அவர்களிடம் விண் ணப்பத்தை பூர்த்தி செய்து தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரி வித்துள்ளார்.
திருச்செந்தூர் கோயிலில் தங்கரதம் புறப்பாடு தற்காலிக நிறுத்தம்
தூத்துக்குடி, ஜூலை 14 - திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜுலை 17 ஆம் தேதி முதல் தங்க ரதம் புறப்பாடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.
இது தொடர்பாக திருக்கோயில் நிர்வா கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் தினந் தோறும் மாலை 6 மணியளவில் தங்கரதம் பிர காரம் சுற்றி வருவது வழக்கமாக உள்ளது. இத்திருக்கோயிலில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாகப் பணிகள் தமிழ்நாடு முதலமைச்சரால் 28.9.2022 அன்று தொடங்கி வைக்கப்பட்டு, பணி நடைபெற்று வரு கிறது.
இக்கோயிலில் இந்தாண்டு கந்தசஷ்டி திருவிழாவிற்கு முன்பு திருக்கோயில் வடக்கு மற்றும் கிழக்கு பிரகார தரைத்தளப் பணிகள் மற்றும் கந்தசஷ்டி திருவிழாவிற்கு பின்பு திருக்கோயில் தெற்கு மற்றும் மேற்கு பிரகாரம் தரைத்தளப் பணிகள் நடைபெற உள்ளன. மேற்படி பணிகள் நடைபெற இருப்பதால், 17.7.2024 முதல் தங்கரதம் புறப்பாடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. பணிகள் முடிவுற்ற பின் தங்கரதம் புறப்பாடு வழக்கம் போல் நடத்தப் படும்” என கோயில் நிர்வாகம் தெரிவித் துள்ளது.
ஜூலை 17-இல் ஆஷூரா நாள்
திருநெல்வேலி, ஜூலை 14 - மொகரம் பிறை ஆஷூரா நாள் ஜூலை 17 ஆம் தேதி நடக்கிறது. இதுகுறித்து நெல்லை மாவட்ட அரசு ஹாஜி முகம்மது கசாலி தெரிவிக்கையில், “இஸ்லா மியர்களின் புனித நாட்களில் ஒன்றான மொகரம் பிறை ஆஷுரா நாள் ஜூலை 17 ஆம் தேதி நடக்கிறது. மொகரம் பிறை ஜூலை 16, 17 ஆம் தேதிகளில் நோன்பு நோற்று நபிவழி சுன்னத்தாகும்” என்றார்.
பி.எப். பணம் பெற்றுத் தருவதாக ரூ.1.50 லட்சம் மோசடி
விருதுநகர், ஜூலை 14- விருதுநகர் அருகே உள்ள காளப்பெருமாள்பட்டி யைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (52). தனியார் கம்பெனி யில் வேலை செய்து வந்துள்ளார். அவருடைய வைப்பு நிதி யை பெற்றுத் தருவதாக ஆர்.ஆர்.நகரைச் சேர்ந்த முனீஸ்வரன்(30) என்பவர் தெரிவித்துள்ளார்.
பின்பு, சாத்தூரில் இந்தியன் வங்கியில் சுப்பிர மணியன் பெயரில் கணக்கு துவங்கியுள்ளார். ஆனால், பாஸ்புக், ஏடிஎம் கார்டை தரவில்லையாம். இதனால், சந்தேக மடைந்த சுப்பிரமணியன் வங்கியில் போய் கேட்டு, மற்றொரு பாஸ் புத்தகத்தை வாங்கி, வரவு செலவை பதிவு செய்துள்ளார். அதில் ரூ.2,41,217 எடுத்தது தெரிய வந்துள்ளது.
இதனால், அதிர்ச்சியைடந்த சுப்பிரமணியன், முனீஸ்வரனிடம் பணத்தை கேட்டதற்கு ரூ.1லட்சம் மட்டும் தந்து விட்டு, மீதமுள்ள பணத்தை தரவில்லையாம். எனவே, சுப்பிரமணியன் மீதமுள்ள ரூ.1,41,217 ஐ மீட்டுத் தரும்படி வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் முனீஸ் வரனை தேடி வருகின்றனர்.