districts

நீதிபதி ஆதிநாதன் விசாரணைக் குழு விரைவில் அறிக்கை தர வேண்டும் இஸ்லாமிய விடுதலை சட்ட நடவடிக்கை குழு கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, மார்ச் 6- தமிழகத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள முஸ்லிம் சிறைக் கைதிகளை விடுதலை செய்யக் கோரி இஸ்லாமிய விடுதலை சட்ட நடவடிக்கை குழு கோரிக்கை விடுத்துள்ளது.  இதுதொடர்பாக சட்ட நடவடிக்கை குழு  ஒருங்கிணைப்பாளர் முதுமான் அலி கூறிய தாவது: கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடும் 40க்கும் மேற்பட்ட முஸ்லிம் சிறைக்கைதிகளை விடுதலை செய்ய கோரி 1 கோடி பேரிடம் கையொழுத்து இயக்கம் துவக்கப்பட்டது. தற்போது 1 லட்சம் கையெ ழுத்து பெறப்பட்டு, தொடர்ந்து இயக்கம் நடைபெற்று வருகிறது. மேலும் விரைவில் தமிழக முதல்வரை சந்திக்க உள்ளது. சிறைக் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையானது கடந்த 20 ஆண்டு கோரிக்கையாக இருந்து வரு கிறது. தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இஸ்லாமிய அமைப் பினருக்கு ஒரு மேயர், துணை மேயர் கூட வழங்கப்படவில்லை. எனவே, தமிழக முதல்வர் இதை கருத்தில் கொண்டு மேயர் துணை, மேயர் தர வேண்டும் என்றார்.