புதுக்கோட்டை, பிப்.20- புதுக்கோட்டை மாவட் டம் இலுப்பூர் அருகே உள்ள ஆலத்தூரில் நீலியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்எல்ஏ, இலுப்பூர் வரு வாய் கோட்டாட்சியர் குழந் தைசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, சிவகங்கை உள்பட பல மாவட்டங்களில் இருந்து 737 காளைகள் பங்கேற்றன. காளைகளை அடக்க மாடு பிடி வீரர்கள் 300 பேர் களம் கண்டனர். காளைகளை அடக் கிய மாடுபிடி வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர் களுக்கும் பரிசுகள் வழங் கப்பட்டன. இதில் மாடுபிடி வீரர்கள் 14 பேர் காயமடைந்தனர். படு காயமடைந்த 5 பேர் மேல் சிகிச்சைக்காக புதுக் கோட்டை மருத்துவக்கல் லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்ட னர்.